சும்மா இரு 2

Excellent interpretation of Ramayan !!
Ram is your soul. Sita is your heart. Ravan is your mind that steals your heart from your soul. Lakshman is your consciousness, always with you and active on your behalf. Hanuman is your intuition and courage that helps retrieve your heart to re-animate your soul ... !!!
0-------------------------------------------------------------------------------
Dreams are reflection of what is stored in mind. This dream has 3 storage reflection.
1) your mother and VNA get together. Memories of past.
2) missing bus is your expectation or your longing which you fear you might not make it.
3) just stored info is your neighbour
------------------------------------------------
As told by Bhagavan Sri Sathya Sai Baba
Shiridi Sai was born on 28th September, 1835.
Bhagavan says:-
In the former Nizam’s dominion, in Aurangabad district, there was a remote village called Pathri. In that village, there lived a couple by name Gangabhavadya and Devagiriamma. They were aggrieved because they did not have any children. In answer to their prayers, a son was born to Devagiriamma, on September 28th, 1835.. That child was Sai Baba.
-------------------------------------------
பழமையான சிவ லிங்கம் :-
              உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் 'ஹரப்பா' வில் உள்ளது.
               அதற்கு அடுத்த பழமையான சிவ லிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. அதில் இரண்டு மிகப் பழமையானவை. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம்.
          அடுத்து, 'குடிமல்லம்' என்ற இடத்தில் உள்ள சிவ லிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர்.
          இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI(Archeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகில் சிவ லிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவ லிங்கம்.
         ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம்.
        உண்மை மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவ லிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.
         இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை.ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்ச கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.
        அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது எனபதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒருமுறையாவது அந்த சிவ லிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
----------------------
Very interesting Paradox
This is part of ancient Greek history. The lawyer teacher was Protagoras (c.485-415 BCE) and the student was Euthalos. This is known as Protagoras's Paradox. This case was not solved. The most interesting part - this is still debated (even today) in law schools as a logic problem!

Many years ago, a Law teacher came across a student who was willing to learn but was unable to pay the
fees.  The student struck a deal saying,  "I will pay your fee the day I win my first case in the court".
Teacher agreed and proceeded with the law course. When the course was finished and teacher started pestering the student to pay up the fee, the student reminded him of the deal and pushed days.
Fed up with this, the teacher decided to sue the student in the court of law and both of them decided to argue for themselves.

The teacher put forward his argument saying:  "If I win this case, as per the court of law, the student has to pay me as the case is about his non-payment of dues.
And if I lose the case, student will still pay me because he would have won his first case.
So either way I will have to get the money".

 Equally brilliant, the student argued back saying:  "If I win the case, as per the court of law, I don't have to pay anything to the teacher as the case is about my non-payment of dues. And if I lose the case, I don't have to pay him because I haven't won my first case yet.
So either way, I am not going to pay the teacher anything".
This is one of the greatest paradoxes ever recorded.
 Who is right and who is the winner?
------------------------------------------------------------------------------------
உபநிஷத் என்றால் என்ன?
“உபநிஷத்” என்றால் "அருகில் அமர்தல்" என்று பொருள். குருவும் சீடனுமாக அருகமர்ந்து ஞானத் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற வேத ரிஷிகளின் அனுபவங்களிலிருந்து வெளிப்பட்ட நூல்களே உபநிஷதங்கள்ன்னு சொல்வாங்க. பின்னர் இவை தொகுக்கப் பட்டு ஞான காண்டம் என்று வழங்கும் வேதப் பிரிவாக ஆயின. ஒவ்வொரு உபநிஷத்தும் ஒவ்வொரு கோணத்தில் ஆத்மா பரமாத்மா பத்தி சொல்வதாக வருகிறது.
மொத்தம் எத்தனை உபநிஷதங்கள்?
சம்பிரதாயமாக அறியப்பட்டவை : 108
வேதாந்த தத்துவத்தில் "முக்கிய உபநிஷதங்கள்” என்று அறியப்பட்டவை: 10
இவற்றில் ரொம்பவும் முக்கியமானவை: 8
அவை,
ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
கட உபநிஷதம் (மரணத்திற்குப் பின்னால்)
ப்ரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
முண்டக உபநிஷதம் (நிழலும் நிஜமும்)
மாண்டூக்ய உபநிஷதம் (ஒன்றென்றிரு)
ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
தைத்திரீய உபநிஷதம் (வாழ்க்கையை வாழுங்கள்)
---------------------------------------------------------------------------------
Upanishad, also spelled Upanisad, Sanskrit Upaniṣad (“Connection”),  one of four genres of texts that together constitute each of the Vedas, the sacred scriptures of most Hindu traditions. Each of the four Vedas—the Rigveda, Yajurveda, Samaveda, and Atharvaveda—consists of a Samhita (a “collection” of hymns or sacred formulas); a liturgical prose exposition called a Brahmana; and two appendices to the Brahmana—an Aranyaka (“Book of the Wilderness”), which contains esoteric doctrines meant to be studied by the initiated in the forest or some other remote place, and an Upanishad, which speculates about the ontological connection between humanity and the cosmos. Because the Upanishads constitute the concluding portions of the Vedas, they are called vedanta (“the conclusion of the Vedas”), and they serve as the foundational texts in the theological discourses of many Hindu traditions that are also known as Vedanta. The Upanishads’ impact on later theological and religious expression and the abiding interest they have attracted are greater than that of any of the other Vedic texts.

The Upanishads became the subject of many commentaries and subcommentaries, and texts modeled after them and bearing the name “Upanishad” were composed through the centuries up to about 1400 ce to support a variety of theological positions. The earliest extant Upanishads date roughly from the middle of the 1st millennium bce. Western scholars have called them the first “philosophical treatises” of India, though they neither contain any systematic philosophical reflections nor present a unified doctrine. Indeed, the material they contain would not be considered philosophical in the modern, academic sense. For example, the Upanishads describe rites or performances designed to grant power or to obtain a particular kind of son or daughter.

One Upanishadic concept had tremendous impact on subsequent Indian thought. Contrary to the assertion of early Western scholars, the Sanskrit term Upaniṣad did not originally mean “sitting around” or a “session” of students assembled around a teacher. Rather, it meant “connection” or “equivalence” and was used in reference to the homology between aspects of the human individual and celestial entities or forces that increasingly became primary features of Indian cosmology. Because this homology was considered at the time to be an esoteric doctrine, the title “Upanishad” also became associated during the middle of the 1st millennium bce with a genre of textual works claiming to reveal hidden teachings. The Upanishads present a vision of an interconnected universe with a single, unifying principle behind the apparent diversity in the cosmos, any articulation of which is called brahman. Within this context, the Upanishads teach that brahman resides in the atman, the unchanging core of the human individual. Many later Indian theologies viewed the equation of brahman with atman as the Upanishads’ core teaching.

Thirteen known Upanishads were composed from the middle of the 5th century through the 2nd century bce. The first five of these—Brihadaranyaka, Chandogya, Taittiriya, Aitareya, and Kaushitaki—were composed in prose interspersed with verse. The middle five—Kena, Katha, Isa, Svetasvatara, and Mundaka—were composed primarily in verse. The last three—Prasna, Mandukya, and Maitri—were composed in prose.
--------------------------------------------------------
Gayatri Mantra Translation:

Om Bhur Bhuvah Svaha
Tat Savitur Varenyam
Bhargo Devasya Dhimahi
Dhiyo Yo Nah Prachodayat

Syllable Translation
Om: Para Brahman
Bhur: The Physical plane
Bhuvah: The Astral plane
Svaha: The Celestial plane
Tat: Ultimate Reality
Savitur: The Source of All
Varenyam: Fit to be worshiped
Bhargo: The Spiritual effulgence
Devasya: Divine Reality
Dhimahi: We meditate
Dhiyo: Intellect
Yo: Which
Nah: Our
Prachodayat: Enlighten

General Translation
We meditate upon the spiritual effulgence of that adorable supreme divine reality 
Who is the source of the physical, the astral and the heavenly spheres of existence.
May that supreme divine being enlighten our intellect, so that we may realise the supreme truth.
---------------------------------------------------------------------------------------------------------------
18 steps-Sabarimala
The steps are there to climb to the Sannithanam. It is the means to an end and not an end by itself. The  steps lead you to where God is. Because of this they become divine and worshipful. If you have seen the entrance to the temples in the south there would be carved images of persons on the steps. Devotees worship them by reverently touching them and then step upon them to enter the temple. The devotees are considered to be superior to the Lord Himself as they are in constant thought of the divine.  Saint Sundarar ' s story clearly enunciates this.

In Sabarimala the holy 18 steps have a lot of significance.  It denotes the 18 tatvas being 5 mahabhutas 10 Indriyas Manas Buddhi and Ahamkara that are to be crossed before we can reach the divine within ourself. 

For the aspirant everything is divine. Everything is Shivamayam.  As such stepping on steps to reach the Sannithanam is not sacrilege. There is an interesting story on this. 

Once a devotee of Lord Shiva went to Pandaripuram.  He did not go into the temple as he thought that worshipping Vishnu will not earn him any merit.  He therefore decided to spend the day in a small shrine of Shiva outside the city. As he lay down to sleep outside the sanctum sanctorum he observed a vaishnavite old man lying down with his feet pointing to the sanctum. Wanting to correct him the Shiva devotee asked him to change the direction of his feet. But wherever that person turned to keep his feet there sprang a Shivalingam and soon the entire temple was filled with Shiva lingams. The Shiva devotee then realised his mistake and rushed to the temple to worship Pandu  ranga who he realised was none other than Shiva. 

Guru is one such stepping stone for us. Merely because we like our KG teacher we do not remain in KG always. Like that let us worship the holy 18 steps and climb them too to reach the Lord who sits on top eagerly awaiting

-----------------------------------------------------------------------------------------------------------------------------

Significance of Guru Poornima...by Sri Sri
Among the 12-13 full moons in a year the Vaishakha full moon is dedicated to Budha( his birth & enlightment),jyestha full moon to the mother earth and the asadha full moon is dedicated to the memory of the masters.This is Guru Poornima.It is the day when the disciple wakes up in his fullness and in the wakefullness he cant but be grateful.This gratitude is not of dwaita(you and me),but of advaita.It is not a river moving from some where to some where.but it is the ocean moving within it self.So gratefulness on Guru poornima symbolizes that fulness.
    The purpose of Guru poornima celebration is to turn back and review ones progressed in life.For a seeker, Guru Poornima is a day of significance.It is the day to review ones progress on Spiritual path & renew ones determination and focus on the goal.As the full moon rises and sets,tears of gratitude arise and repose in to the vastness of ones self.


Lets dedicate the day for our inner welbeing.eat light,listen to music,meditate,watch the moon
-----------------------------------------------------------

குருவருள் பெற குரு பௌர்ணமி!

ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமியை குரு பௌர்ணமி என்று அழைக்கிறார்கள். அது ஏன்? குரு பௌர்ணமிக்கான சிறப்பு என்ன?

சத்குரு:

மனித உடல் என்பது மண்ணைத் தவிர வேறு ஏதுமில்லை. எனவே இந்த பூமியின் இயல்பு, இந்த பூமியின் மனப்பாங்கு போன்றவை மாறும்போது அதே மாற்றங்கள் மனித உடலிலும்நிகழ்கின்றன. பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (ஜனவரி முதல் ஜுன் வரை – தை முதல் ஆனி வரை) உத்திராயணம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஜுலை முதல் டிசம்பர் வரை – ஆடி முதல் மார்கழி வரை) தட்சிணாயணம் என்கிறோம்.

உத்திராயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (தை மாதம்) “தன்ய பௌர்ணமி” என அழைக்கிறோம். தட்சிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (ஆடி மாதம்) “குரு பௌர்ணமி”என்கிறோம். இப்பௌர்ணமி ஜுலை மாதத்தில் ஏற்படும். தட்சிணாயண காலமான (ஜுலையிலிருந்து டிசம்பர் வரை) ஆறு மாதங்கள் ‘உள்வாங்கிக் கொள்ளும்‘ தன்மையுடையதாகவும்,உத்திராயண காலமான (ஜனவரி முதல் ஜுன் வரை) ஆறு மாதங்கள் ‘நிறைவடையும்‘ தன்மையுடையதாகவும் உள்ளன.

சிவன் குருவாக அமர்ந்த நாள்!

சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற சில யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை,அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியன்றுதெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்றுஅழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தட்சிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.

லிங்கபைரவி தேவியின் கண்கள் கூட ஒவ்வொரு 6 மாதத்திற்கும் மாறும். ஜனவரியிலிருந்து ஜுன் வரை உத்திராயணத்தில் தேவியின் கண்கள் தீப்பொறியாகவும், ஜுலையிலிருந்து டிசம்பர்வரை தட்சிணாயணத்தில் அவள் கண்கள் சாந்தமாகவும் இருக்கும். தேவியின் சக்தியும் அதற்கேற்றாற் போல மாறும். இதனாலேயே இந்தியாவில் பெண்தன்மைக்கு உண்டானகொண்டாட்டங்கள் அனைத்தும் தட்சிணாயணத்திலேயே தொடங்கும்.

உத்திராயணத்தில், ஜனவரியிலிருந்து ஜுன் வரை இந்த பூமி ஆண்தன்மை வாய்ந்ததாக, நிறைவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். அடுத்த ஆறு மாதங்கள் ஜுலையிலிருந்து டிசம்பர்வரை, தட்சிணாயணத்தில் பெண்தன்மை வாய்ந்ததாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. எனவேதான் சிவன் தன்னுடைய போதனைகளை வழங்க தட்சிணாயனத்தின் முதல்பௌர்ணமியை தேர்ந்தெடுத்து குருவாக அமர்ந்து போதனைகளை வழங்கினார். எனவேதான் இந்தப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று வழங்கப்படுகிறது.

அருள் நிறைந்த மாதம்

இந்த மாதம் அருள் நிறைந்த மாதமாக இருக்கிறது. அருள் என்பது வளர்ச்சிக்கு உரமாக இருந்து உதவுகிறது. அருளின் உதவியால் ஒருவர் திறமை மற்றும் சாத்தியம் நிறைந்த அடுத்தபரிமாணத்திறகு தன்னை உயர்த்திக் கொள்ள முடியும். அப்படியென்றால் அந்த அருளைப் பெற்று பயன்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எதுவும் செய்யத்தேவையில்லை. ‘நான்’ என்பதை நிலைநாட்டுவதற்காக நீங்கள் செய்யும் செயல்களை எந்த அளவு குறைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவு அருள் நிறைந்தவராக மாறக் கூடிய வாய்ப்பைப்பெறுகிறீர்கள்.

நீங்கள் எல்லோரும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த குரு பௌர்ணமி தினமன்று நீங்கள் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது. “குருபௌர்ணமி தினம், எனவே நான் வரவில்லை” என்று விடுமுறை கேட்டு விண்ணப்பம் அனுப்புங்கள். உங்கள் நண்பர்களைக் கூட, குரு பௌர்ணமி நாளன்று விடுமுறைக்கு விண்ணப்பிக்கச்சொல்லுங்கள். அந்த நாளில் நீங்கள் என்ன செய்யவேண்டும்? உங்களுடைய உள்நலத்திற்காக அந்த நாளை அர்ப்பணியுங்கள், அளவாக சாப்பிடுங்கள், இசை கேளுங்கள், தியானம் செய்யுங்கள்,பூரண நிலவைப் பாருங்கள். உங்களுக்கு இது மிகவும் அற்புதமாக இருக்கும், ஏனென்றால் இது உத்தராயணத்திற்குப் பின் வரும் முதல் பௌர்ணமி. இது ஒரு முக்கியமான நாள் என்றுகுறைந்தது பத்து பேருக்காவது நீங்கள் சொல்லவேண்டும்.

"ஆதியோகி, ஆதிகுருவாகி தன் அறிதலை முதல் ஏழு சீடர்களுடன் பகிர்ந்து கொண்ட நன்னாளே குரு பௌர்ணமி. அந்நாளில் குருவின் கருணை அபரிமிதமாய் பெருகுகிறது. நீங்கள் விருப்பமுடன் இருந்தால் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கதவும் உங்களுக்காகத் திறக்கும்."

நான் உங்களுடன் இருக்கிறேன்.

அன்பும் அருளும்.
சத்குரு.
------------------------------------------------------------------------------------------------------
Abdul Kalam
It has been eight hours since we last talked – sleep eludes me and memories keep flushing down, sometimes as tears. Our day, 27th July, began at 12 noon, when we took our seats in the flight to Guhawati. Dr. Kalam was 1A and I was IC. He was wearing a dark colored “Kalam suit”, and I started off complimenting, “Nice color!” Little did I know this was going to be the last color I will see on him.
Long, 2.5 hours of flying in the monsoon weather. I hate turbulence, and he had mastered over them. Whenever he would see me go cold in shaking plane, he would just pull down the window pane and saw, “Now you don’t see any fear!”.
That was followed by another 2.5 hours of car drive to IIM Shillong. For these two legged trip of five hours we talked, discussed and debated. These were amongsthundreds of the long flights and longer drives we have been together over the last six years. 
As each of them, this was as special too. Three incidents/discussions in particular will be “lasting memories of our last trip”. 
First, Dr. Kalam was absolutely worried about the attacks in Punjab. The loss of innocent lives left him filledwith sorrow. The topic of lecture at IIM Shillong was Creating a Livable Planet Earth. He related the incident to the topic and said, “it seems the man made forces are as big a threat to the livability of earth as pollution”. We discussed on how, if this trend of violence, pollution and reckless human action continues we will forced to leave earth. “Thirty years, at this rate, maybe”, he said. “You guys must do something about it… it is going to be your future world”
Our second discussion was more national. For the past two days, Dr. Kalam was worried that time and again Parliament, the supreme institution of democracy, was dysfunctional. He said, “I have seen two different governments in my tenure. I have seen more after that. This disruption just keeps happening. It is not right. I really need to find out a way to ensure that the parliament works on developmental politics.” He then asked me to prepare a surprise assignment question for the students at IIM Shillong, which he would give them only at the end of the lecture. He wanted to them to suggest three innovative ways to make the Parliament more productive and vibrant. Then, after a while he returned on it. “But how can ask them to give solutions if I don’t have any myself”. For the next one hour, we thwarted options after options, who come up with his recommendation over the issue. We wanted to include this discussion in our upcoming book, Advantage India. 
Third, was an experience from the beauty of his humility. We were in a convoy of 6-7 cars. Dr. Kalam and I were in the second car. Ahead us was an open gypsy with three soldiers in it. Two of them were sitting on either side and one lean guy was standing atop, holding his gun. One hour into the road journey, Dr. Kalam said, “Why is he standing? He will get tired. This is like punishment. Can you ask a wireless message to given that he may sit?” I had to convince him, he has been probably instructed to keep standing for better security. He did not relent. We tried radio messaging, that did not work. For the next 1.5 hours of the journey, he reminded me thrice to see if I can hand signal him to sit down. Finally, realizing there is little we can do – he told me, “I want to meet him and thank him”. Later, when we landed in IIM Shillong, I went inquiring through security people and got hold of the standing guy. I took him inside and Dr. Kalam greeted him. He shook his hand, said thank you buddy. “Are you tired? Would you like something to eat? I am sorry you had to stand so long because of me”. The young lean guard, draped in black cloth, was surprised at the treatment. He lost words, just said, “Sir, aapkeliye to 6 ghantebhikhaderahenge”. 
After this, we went to the lecture hall. He did not want to be late for the lecture. “Students should never be made to wait”, he always said. I quickly set up his mike, briefed on final lecture and took position on the computers. As I pinned his mike, he smiled and said, “Funny guy! Are you doing well?” ‘Funny guy’, when said by Kalam could mean a variety of things, depending on the tone and your own assessment. It could mean, you have done well, you have messed up something, you should listen to him or just that you have been plain naïve or he was just being jovial. Over six years I had learnt to interpret Funny Guy like the back of my palm. This time it was the last case. 
“Funny guy! Are you doing well?” he said. I smiled back, “Yes”. Those were the last words he said. Two minutes into the speech, sitting behind him, I heard a long pause after completing one sentence. I looked at him, he fell down. 
We picked him up. As the doctor rushed, we tried whatever we could. I will never forget the look in his three-quarter closed eyes and I held his head with one hand and tried reviving with whatever I could. His hands clenched, curled onto my finger. There was stillness on his face and those wise eyes were motionlessly radiating wisdom. He never said a word. He did not show pain, only purpose was visible. 
In five minutes we were in the nearest hospital. In another few minutes the they indicated the missile man had flown away, forever. I touched his feet, one last time. Adieu old friend! Grand mentor! See you in my thoughts and meet in the next birth. 
As turned back, a closet of thoughts opened. 
Often he would ask me, “You are young, decide what will like to be remembered for?” I kept thinking of new impressive answers, till one day I gave up and resorted to tit-for-tat. I asked him back, “First you tell me, what will you like to be remembered for? President, Scientist, Writer, Missile man, India 2020, Target 3 billion…. What?” I thought I had made the question easier by giving options, but he sprang on me a surprise. “Teacher”, he said. 
Then something he said two weeks back when we were discussing about his missile time friends. He said, “Children need to take care of their parents. It is sad that sometimes this is not happening”. He paused and said, “Two things. Elders must also do. Never leave wealth at your deathbed – that leaves a fighting family. Second, one is blessed is one can die working, standing tall without any long drawn ailing. Goodbyes should be short, really short”. 
Today, I look back – he took the final journey, teaching, what he always wanted to be remembered doing. And, till his final moment he was standing, working and lecturing. He left us, as a great teacher, standing tall. He leaves the world with nothing accumulated in his account but loads of wishes and love of people. He was a successful, even in his end. 
Will miss all the lunches and dinners we had together, will miss all the times you surprised me with your humility and startled me with your curiosity, will miss the lessons of life you taught in action and words, will miss our struggles to race to make into flights, our trips, our long debates. You gave me dreams, you showed me dreams need to be impossible, for anything else is a compromise to my own ability. The man is gone, the mission lives on. Long live Kalam.
Your indebted student,
Srijan Pal Singh
Don’t take rest after your first victory because if you fail in second, more lips are waiting to say that your first victory was just luck.” - A.P.J Abdul Kalam 

“All Birds find shelter during a rain. But Eagle avoids rain by flying above the Clouds.” - A.P.J Abdul Kalam

“Failure will never overtake me if my definition to succeed is strong enough”. - A.P.J Abdul Kalam 

“Man needs difficulties in life because they are necessary to enjoy the success.” - A.P.J Abdul Kalam

“If you want to shine like a sun. First burn like a sun.” - A.P.J Abdul Kalam  

“It is very easy to defeat someone, but it is very hard to win someone” - A.P.J Abdul Kalam 

"All of us do not have equal talent. But , all of us have an equal opportunity to develop our talents.” - A.P.J Abdul Kalam 

" Be more dedicated to making solid achievements than in running after swift but synthetic happiness." -A.P.J Abdul Kalam 

"Thinking should become your capital asset, no matter whatever ups and downs you come across in your life."  - A.P.J Abdul Kalam 

" Without your involvement you can't succeed. With your involvement you can't fail. " - A.P.J Abdul Kalam
---------------------------------------------------------------------------
SOMEONE HAS WRITTEN THESE 10 BEAUTIFUL LINES. READ and TRY to UNDERSTAND the DEEPER MEANING of THEM.

1). PRAYER is not a "spare wheel" that YOU PULL OUT when IN trouble, but it is a "STEERING WHEEL" that DIRECT the RIGHT PATH THROUGHOUT LIFE.

 2). Why is a CAR'S WINDSHIELD so LARGE & the REAR VIEW MIRROR so small? BECAUSE our PAST is NOT as IMPORTANT as OUR FUTURE. So, LOOK AHEAD and MOVE ON.

3). FRIENDSHIP is like a BOOK. It takes a FEW SECONDS to BURN, but it TAKES YEARS to WRITE.

4). All THINGS in LIFE are TEMPORARY. If they are GOING WELL, ENJOY them, they WILL NOT LAST FOREVER. If they are going wrong, don't WORRY, THEY CAN'T LAST LONG EITHER.

5). Old FRIENDS are GOLD! NEW friends are DIAMONDS! If you GET a DIAMOND, DON'T FORGET the GOLD! To HOLD a DIAMOND, you ALWAYS NEED a BASE of GOLD!
6). Often when WE LOSE HOPE and THINK this is the END, GOD SMILES from ABOVE and SAYS, "RELAX, SWEETHEART; it's JUST a BEND, NOT THE END!"

7). When GOD SOLVES your PROBLEMS, you HAVE FAITH in HIS ABILITIES; when GOD DOESN'T SOLVE YOUR PROBLEMS, HE has FAITH in YOUR ABILITIES.

8). A BLIND PERSON asked GOD: "CAN THERE be ANYTHING WORSE THAN LOSING EYE SIGHT?" HE REPLIED: "YES, LOSING YOUR VISION!"

9). When YOU PRAY for OTHERS, GOD LISTEN to YOU and BLESSES THEM, and SOMETIMES, when you are SAFE and HAPPY, REMEMBER that SOMEONE has PRAYED for YOU.

10). WORRYING does NOT TAKE AWAY TOMORROW'S TROUBLES; IT TAKES AWAY today's PEACE.
--------------------------------------------------------------------------------------------------------------------
திருவிளையாடல்கள்

திருவிளையாடற்புராணத்தில் பரம்பொருளின்
(சிவபெருமானின் )64
திருவிளையாடல்களும் தனித்தனிப்
படலங்களாக விளக்கப்பட்டுள்ள

1. இந்திரன் பழி தீர்த்த படலம்
2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
3. திருநகரங்கண்ட படலம்
4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்
5. தடாதகையாரின் திருமணப் படலம்
6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்
9. ஏழுகடல் அழைத்த படலம்
10. மலயத்துவசனை அழைத்த படலம்
11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்
12. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்
13. கடல் சுவற வேல்விட்ட படலம்
14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்
15. மேருவைச் செண்டாலடித்த படலம்
16. வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்
17. மாணிக்கம் விற்ற படலம்
18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
19. நான் மாடக்கூடலான படலம்
20. எல்லாம் வல்ல சித்தரான படலம்
21. கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்
22. யானை எய்த படலம்
23. விருத்த குமார பாலரான படலம்
24. கால் மாறி ஆடிய படலம்
25. பழியஞ்சின படலம்
26. மாபாதகம் தீர்த்த படலம்
27. அங்கம் வெட்டின படலம்
28. நாகமேய்த படலம்
29. மாயப்பசுவை வதைத்த படலம்
30. மெய் காட்டிட்ட படலம்
31. உலவாக்கிழி அருளிய படலம்
32. வளையல் விற்ற படலம்
33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்
34. விடையிலச்சினை இட்ட படலம்
35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்
36. இரசவாதம் செய்த படலம்
37. சோழனை மடுவில் வீட்டிய படலம்
38. உலவாக் கோட்டை அருளிய படலம்
39. மாமன்னனாக வந்து வழக்குரைத்த படலம் 39. Mamanaaga vandhu vazhakku uraitha padyam.
40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்
41. விறகு விற்ற படலம்
42. திருமுகம் கொடுத்த படலம்
43. பலகை இட்ட படலம்
44. இசைவாது வென்ற படலம்
45. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்
46. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்
47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்
49. திருவாலவாயான படலம்
50. சுந்தரப்பேரம் செய்த படலம்  Sundara per ambu eitha padalam
51. சங்கப்பலகை கொடுத்த படலம்
52. தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்
53. கீரனைக்( நக்கீரனைக்) கரையேற்றிய படலம்
54. கீரனுக்கு ( நக்கீரனுக்கு) இலக்கணம் உபதேசித்த படலம்
55. சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்
56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
57. வலை வீசின படலம்
58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்
59. நரி பரியாக்கிய படலம்
60. பரி நரியாக்கிய படலம்
61. மண் சுமந்த படலம்
62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
63. சமணரைக் கழுவேற்றிய படலம்
64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன.
ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது.
அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள்.
சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது.
இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர்.
கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது.
மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன.
பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன.
இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்.
கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------
ருத்ராட்ஷத்தின் – மகிமை- மஹா பெரியவர்

ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;
ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும்
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷத்தின் - மகிமை

ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?
குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,

ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.
ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும். அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய
வி பூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
Why Dharbai is used as ring during auspicious & inauspicious occasions!!!
This article is on one of the practices widely used by Indian Brahmins all over using a Holy Grass named Dharbham or Dharbai. The botonical name is Eragrostis cynosuroides and Hindi they call
as Kus or Kusha. Brahmins use this Darbai grass in all functions, auspicious or inauspicious. A performing person needs to wear a ring made of this
Dharbham. But many have lost the reason of why it is to be used in the first place.

What I learnt from my father is proved to be accurately correct by a Medicine Practitioner. A medical practitioner, once visited my home. When the topic turned to many
subjects, I needed to tell him about the Holy Grass named Dharbham. When I told him about the usage and the values, he could not just believe my words. So, he took out a bunch of the Dharbham
from me, went straight to the clinic to take an x-ray of his palm, by covering his hand with the Dharbham. To his utter surprise, he found that the grass absorbed about 60% of the (x-ray) radiation!

When the so powerful X-ray radiation can be absorbed by the Holy Grass, why can it not absorb the ill-radiations spread over the atmosphere? While chanting and reciting some Vedic phrases and
versus, one needs to wear a ring made of Dharbham on his right hand ring finger. This is most essential, while performing all the rituals, such as Agni Santhanam, Thiru-Aaradhanam, all sorts of
Havans known as Homam etc.


The count of leaves depends upon the function that is held viz.: for some functions related to death only Single leaf Dharbham is used; for Auspicious and daily routine a ring made of two leaves is
used; for inauspicious but not death related functions, (i.e. Amavasya Tharppanam,Pithru Pooja etc) a three leaf Dharbham ring is used. And for the Temple Prayer and Pooja, a Four-leaf Dharbham
ring is used.


Also, when a fire ritual known as Agni Santhana is performed, these Dharbham are spread all the four sides of the Agni Kundam. Also, during the Eclipse time, these Dharbham are used to cover all
food items to protect them from the harmful ultra violet radiation.


Whenever any function is held, firstly they perform a site-cleansing act known as "Sudhhi Punyaahavachanam". While reciting the selective versus, they hold the Dharbham bunch in their hand and
placing the tip point of it over the vessel containing water. Thus the recited vibration values are absorbed by water in the vessel through the Dharbham.


They found that the Holy Grass known as Dharbham has the highest value in conducting the phonetic vibrations through its tip. Later, they sprinkle the Holy water at every nook and corner of the place,
where the function is held. A Dharbham without the tip is considered of no value, as the conductor-type value is lost in it."
------------------------------------------------------------------------------------------------------------------------
A conversation between Wayne Dyer and his student:

“If I were to squeeze this orange as hard as I could, what would come out?” I asked him.

He looked at me like I was a little crazy and said, “Juice, of course”.

“Do you think apple juice could come out of it?”

‘No! he laughed.

‘What about grapefruit juice?’

‘No!’

‘What would come of it?’

‘Orange juice, of course’

‘Why? Why when you squeeze an orange does orange juice comes out?’

He may have been getting a little exasperated with me at this point.

“Well, it’s an orange and that’s what’s inside.”

I nodded.

“Let’s assume that this orange isn’t an orange, but it’s you. And someone squeezes you, puts pressure on you, says something you don’t like, offends you. And out of you comes anger, hatred, bitterness, fear. Why?

The answer, as our young friend has told us, is “because that’s what’s inside”. It’s one of the great lessons of life.

What come out when life squeezes you? When someone hurts or offends you? If anger, pain and fear come out of you, it’s because that’s what’s inside. It doesn’t matter who does the squeezing: your mother, your brother, your children, the government.

If someone says something about you that you don’t like, what comes out of you is what’s inside. And what’s inside is up to you, it’s your choice.

When someone puts the pressure on you and out of you comes anything other than love, it’s because that’s what you’ve allowed to be inside. Once you take away all those negative things you don’t want in your life and replace them with love, you’ll find yourself living a highly functioning life.”

Squeeze out Love and Compassion!!!
-----------------------------------------------------------------------------
கடவுளை காண விலகி போ

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

ஞானி கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

-தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
------------------------------------------------------------------------------------
சித்தர் பழமொழிகள்.  சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை  தொகுத்தளித்திருக்கிறார்.  
1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.  
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.  
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். 
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.  
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.  
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்  
1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்  உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.  
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.  உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.  
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.  சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.  
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்  மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.  
5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்  ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.  
6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.  விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா
-----------------------------------------------
ராமாயண உட்பொருள்
ராமாயண சாரம்

தபஸிலும் ஸ்வாத்யாயத்திலும் (வேத படிப்பு) மிகச்சிறந்த வால்மீகி ராமாயண காவியம் எழுதினார் என்றால், அதில் மிகச் சிறந்த வேத வேதாந்தங்களை அடக்கி இருக்கிறார்.

ஹிந்து புராணங்களில் symbolism அதிகம் இருக்கின்றன. அவை சொல்ல வரும் விழயங்கள் நுட்பமானவை. உள்கருத்துக்களை நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.

Ideal woman ஆன பிராட்டி சீதா பெண்களுக்கு இலக்கணமாக பேசப்படுகிறாள். பிராட்டியை ஜீவனாக உருவகப்படுத்தி, அந்த ஜீவன் எப்படி ஆன்மீக படியேறி பரமாத்மாவை அடைவான் என்பதே ராமாயணம் நமக்கு காட்டும் வழி.

ராம என்கிற பதத்துக்கு எல்லா விஷயங்களிலும் ரமிக்கின்றவன் என்று அர்த்தம். (who revels in all beings and things…) எல்லாவற்றிலும் நீக்கமற கலந்திருக்கும் ஆத்மா தான் ராமன். அந்த ஆத்மா இணைந்திருப்பது சீதை என்கிற மனதுடன். சுயகட்டுப்பாடு (self control) இருக்கும் இடத்தில் ஆத்மா என்கிற ராமன் வெளிப்படுவான். எங்கு ஒன்றுக்கொன்று விரோதம் இல்லாமல் புலன் கட்டுப்பாடு (no conflict = a+yodhya) இருக்கிறதோ, அங்கு ராமன் என்கிற ஆத்மா வெளிப்படும்.

ராமன் என்கிற ஆத்மா, சீதை என்கிற மனதுடன் இணையும்போது சம்சாரம் (life) மற்றும் விஷயங்கள் ஏற்படுகின்றன.

சீதை என்கிற மனது எங்கிருந்து வந்தது என்று யாராலும் சொல்ல முடியாது. (அத்வைத்த்தில் இது தீராத தர்க்கம். சங்கரர் இதை அனாதி என்று சொல்லி விட்டுவிட்டார்...)

சீதையும் இந்த பூமியிலிருந்து தோன்றி பூமியிலேயே மறைகிறாள். மனசு எங்கிருந்து தோன்றுகிறது; சமாதி நிலையில் எங்கு மறைகிறது என்று அறிவார் இல்லை.

சீதை என்கிற மனம், ராமன் என்கிற ஆத்மாவுடன் இரண்டற கலந்து வெளி விவகாரங்களில் லயிக்காத வரை பூர்ணமான ஆனந்த நிலையில் இருக்கிறது. (perfect harmony) அது அயோத்தியாக இருந்தாலும், காடாக இருந்தாலும் சரி.

சீதை தங்கமானுக்கு ஆசைப்படும்போது, மனம் கீழான லௌகீக விஷயங்களில் ஆசைப்படும்போது, புறத்தே விரிந்து புலன் கருவிகளை நாட ஆரம்பிக்கிறது. இதுவே ஜீவனுக்கு இறங்கு முகம்.

ராமனின் (ஆத்மாவின்) பூர்ணத்துவத்தை மறந்த / அறியாத சீதை (மனம்), லட்சுமணனை (தபஸ் – முயற்சி) ராமனுக்காக ஏவுகிறாள். இதனால், சீதை (மனம்) பத்துதலை ராவணனுக்கு (பத்து புலன் கருவிகள்) எளிதாக வசப்படுகிறாள். தருமமும், தபஸூம் நிறைந்த உலகிலிருந்து, சீதை லங்கைக்கு (விஷயங்களால் நிறைந்த சம்சாரத்திற்கு material world) கடத்திச் செல்லப்படுகிறாள்.

பின் மனம் பல கஷ்டங்களை அனுபவித்து வருந்தி, ஒரு முகப்பட்டு ராமனுக்கு ஏங்கி சரணாகதி அடைகிறது.

ராமன் (self ஆத்மா) வாலி என்கிற காமத்தை வீழ்த்தி, வானரங்களை (நினைவுகள்) சேர்த்துக்கொண்டு சமுத்திரத்தை (விஷய சுகங்களாக தோன்றும் மாயை) தாண்டி லங்கையை அடைகிறான்.

அதாவது சீதை என்கிற மனம் உள்ளே திரும்பி ஆத்மாவிடம் இடையறாது லயித்தால் மனம் தன் அஸ்தித்வத்தை (இருப்பை) இழக்கிறது. பூர்ணமான புருஷனான ஆத்மா தன்னில் மனதை லயப்படுத்திக்கொண்டாலும், மனதால் பாதிக்கப்படுவது இல்லை.

ஜீவன் தன்னுடைய சுய சொரூபம் சுத்தப்பட்டு பரம்பதப்பட்ட (rehabilated) நிலையில் மனது ஆத்மாவில் ஒடுங்கி மறைகிறது. மோக்ஷ நிலையை எட்டிய ஆத்மாவுக்கு மனதால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. தன் ஆத்ம இன்பத்தில் (kingdom of life) லயித்த அதற்கு மனதின் தேவை இல்லாமல் போகிறது. அதனால், மனது காட்டுக்கு விரட்டப்படுகிறது.

ஆனால், மனஸ் ஆத்மாவின் தொடர்பின் காரணமாக ஞானம் பிறக்கிறது (லவ குசர்கள்). அவர்களின் சாரமாக ராமாயணம் உலகெங்கிலும் பரப்பப் படுகிறது.

இதுவே ராமாயணத்தின் சாரம். இதை உணர்ந்தவனுக்கு பிறப்பில்லை
----------------------------------------------------------
பகவத் கீதை  ரகசியம்  - புதிய சிந்தனைகள் :-

நண்பர்களே !!! எல்லோரும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாட தயார் செய்து கொண்டிருபீர்கள் . அதற்கு முன் மணிவண்ணனை பற்றியும் ,  பகவத் கீதை பற்றியும் ஒரு பார்வை பார்கலாமா !!!!

கண்ணனை மட்டும் அல்ல கர்ணனை பற்றி பதிவு தொடரும். கர்ணன் தானே சிறந்த கதா பாத்திரம் மகாபாரதத்தில் !!!!

பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டன. ஆதலால்,இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூல் என்று சிலர் பேசுகிறார்கள்.

கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவது என்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள்.
அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

இந்நூல் ஞான சாஸ்திர்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும். ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை என்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே, 'ஆதலால், பாரதா, போர் செய்', என்ற பல்லவி வந்துகொண்டே இருக்கின்றது அன்றோ? என்று கூறிச் சிலர் ஆட்சேபிக்கலாம்.

அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன். அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன். துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா

இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் 'common sense' என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.

சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம்.
சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொது என்று விளங்குகிறது.

ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள்.
சாதாரண ஞானத்தின்படி நடக்க ஒட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன.
சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது.

நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டும் இருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.
-------------------------------------------------------------------------

॥अथ श्री मातृपञ्चकम् ॥
atha shrI mAtR^ipa~nchakam.

मुक्तामणि त्वं नयनं ममेति राजेति जीवेति चिर सुत त्वम् । इत्युक्तवत्यास्तव वाचि मातः ददाम्यहं तण्डुलमेव शुष्कम् ॥ १॥

muktAmaNi tvaM nayanaM mameti rAjeti jIveti chira suta tvam.h | ityuktavatyAstava vAchi mAtaH dadAmyahaM taNDulameva shuShkam.h || 1||

Into the mouth, that said: ᳚You are the pearl of my eyes, my prince, may you live long, son!᳚, O Mother! I now offer only dry grains of rice. (1)

अम्बेति तातेति शिवेति तस्मिन् प्रसूतिकाले यदवोच उच्चैः । कृष्णेति गोविन्द हरे मुकुन्द इति जनन्यै अहो रचितोऽयमञ्जलिः ॥ २॥

aMbeti tAteti shiveti tasmin. prasUtikAle yadavocha uchchaiH | kR^iShNeti govinda hare mukunda iti jananyai aho rachito.ayama~njaliH || 2||

At the time of child birth you cried out loudly - ᳚᳚Mother!! Father!! Shiva!! Krishna! Govinda! Hare! Mukunda!.᳚ To that mother I now bow with folded hands. (2)

आस्तं तावदियं प्रसूतिसमये दुर्वारशूलव्यथा नैरुच्यं तनुशोषणं मलमयी शय्या च संवत्सरी । एकस्यापि न गर्भभारभरणक्लेशस्य यस्याक्षमः दातुं निष्कृतिमुन्नतोऽपि तनयस्तस्यै जनन्यै नमः ॥ ३॥

AstaM tAvadiyaM prasUtisamaye durvArashUlavyathA nairuchyaM tanushoShaNaM malamayI shayyA cha saMvatsarI | ekasyApi na garbhabhArabharaNakleshasya yasyAkShamaH dAtuM niShkR^itimunnato.api tanayastasyai jananyai namaH || 3||

At the time of giving birth to me, O mother! you suffered from unbearable pain. You did not speak about the suffering of your body nor of the painful condition while lying in the bed for almost a year. For even one of the sufferings that you underwent during pregnancy, O mother!, a son is unable to offer atonement. To that mother I offer my salutations! (3)

गुरुकुलमुपसृत्य स्वप्नकाले तु दृष्ट्वा यतिसमुचितवेशं प्रारुदो मां त्वमुच्चैः । गुरुकुलमथ सर्वं प्रारुदत्ते समक्षं सपदि चरणयोस्ते मातरस्तु प्रणामः ॥ ४॥

gurukulamupasR^itya svapnakAle tu dR^iShTvA yatisamuchitaveshaM prArudo mAM tvamuchchaiH | gurukulamatha sarvaM prArudatte samakShaM sapadi charaNayoste mAtarastu praNAmaH || 4|| na dattaM mAtast

When in a dream, you saw me dressed like an ascetic. You cried aloud and came running to the school (to see me). The whole school then immediately cried before you. At your feet, O mother! I offer my salutation! (4)

न दत्तं मातस्ते मरणसमये तोयमपिवा स्वधा वा नो दत्ता मरणदिवसे श्राद्धविधिना । न जप्त्वा मातस्ते मरणसमये तारकमनु- रकाले सम्प्राप्ते मयि कुरु दयां मातुरतुलाम् ॥ ५॥

na dattaM mAtaste maraNasamaye toyamapivA svadhA vA no dattA maraNadivase shrAddhavidhinA | na japtvA mAtaste maraNasamaye tArakamanu\- rakAle samprApte mayi kuru dayAM mAturatulAm.h || 5||

I did not offer you water at the time of your death, Oh mother! I did not even offer the oblations as per funerary rites on the day of your death. Nor did I repeat the mantra that delivers one across the ocean of this world. Alas! I have come at an inappropriate time! O mother! Bestow upon me your unequalled compassion
---------------------------------------------
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல
வேண்டும்?
படித்து பாருங்கள் உங்களுக்கு
மெய்
சிலிர்த்துபோகும் !!
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல
வேண்டும்?
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன்
இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
கோயில்களுக்கும் பொருந்தாது
என்பதை கவனத்தில்கொள்ள
வேண்டும். எல்லா லட்சணங்களையும்
கொண்டிருக்கும்
கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம்
இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு
கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம்
வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான
லொகேஷன். இது பொதுவாக
ஊருக்கு ஒதுக்கு புறமான
இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும்
ஆழ்ந்த இடங்கள் தான் இதன்
ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான
காந்த சக்தியும், பாஸிட்டிவ்
எனர்ஜியும் அதிகம்
கொண்டிருக்கும். இது நார்த் போல்
சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
முக்கிய சிலைதான் இந்த
மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது
மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம்
தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே
அதிகம் காணப்படும் அந்த காந்த
மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக
இந்த மூலஸ்தானம் சுயம்பாக
உருவாகும் அல்லது அங்கே
கிடைக்க பெறும் சிலை அப்புறம்
தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே
அதுவும் இந்த மெயின்
கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு
தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது
எதற்கு தெரியுமா? அது தான்
கீழே இருக்கும் அந்த எனர்ஜியை
அப்படி பன்மடங்காக்கி வெளிக்
கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும்
மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும் அளவுக்கு
கதவுகள் இருக்கும். இது அந்த
எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு
வழியாக அதுவும் வாசலில் இடது
மற்றும் வலது புறத்தில் இருந்து
இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த எனர்ஜி
கிடைக்கும். இது உடனே
தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி.
ரெகுலராய் கோயிலுக்கு
செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித
எனர்ஜி அந்த கோயிலில்
கிடைக்கும்
என்று.
அது போக கோயிலின்
பிரகாரத்தை இடமிருந்து வலமாய்
வரும்
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை
இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது
அப்படியே எனர்ஜி சுற்றுபாதை
கூட
சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில்
வந்து சேரும். இந்த காந்த மற்றும்
ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி
நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன்
மூளைக்கும் தேவையான ஒரு
பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு
கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து
கொண்டிருக்கும்.. அது போக அந்த
விக்கிரகத்திற்க்கு பின் ஒரு
விளக்கு (இப்போது நிறைய
கோயில்களில் பல்புதான்).. அதை
சுற்றி கண்ணாடி அது செயற்க்கை
ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது
அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ்
செய்யும் ஒரு டெக்னிக்கல்
செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும்
போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த
எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு
அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான்
மூலஸ்தானம். இவ்வளவு
அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு
10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில்
அந்த இடம் சாக்கடை நாற்றம்
எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள
இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர்,
பஞ்சாமிர்தம், தேன், சந்தனம்,
குங்குமம், விபூதி மற்றும்
எண்ணெய், சீயக்காய்
போன்ற எவ்வளவு விஷயங்களை
கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற
விஷயம் வரவே வராது..
அது போக கடைசியில் செய்யும்
சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும்
கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்),
துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்),
கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து
அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு
கொடுக்கும் தீர்த்தம்
ஒரு அபரித சுவை மற்றும் அதன்
சுவை கோயிலில் உள்ளது போல்
எங்கும் கிடைக்காது. இதை ஒரு
சொட்டு அருந்தினால் கூட
அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
தை ரெகுலராய்
உட்கொண்டவர்களுக்கு இது ஒரு
ஆன்டிபயாட்டிக் என்றால்
அதிகமில்லை. இதை மூன்று
தடவை கொடுக்கும்
காரணம் ஒன்று உங்கள் தலையில்
தெளித்து இந்த
உடம்பை புண்ணியமாக்க; மீதி
இரண்டு சொட்டு உங்கள்
உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை
அமெரிக்காவில் இருந்து
வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி,
வேம்பின் ஃபார்முலாவில்
தயாரிக்கும் காரணம் இது தான்
இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம்
மற்றும்
இரத்ததை சுத்த படுத்தும் ஒரு
அற்புதமான கலவை தான் இந்த
தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம்
தினமும் சென்று வந்த இந்த
மானிடர்களுக்கு எந்த வித நோயும்
அண்டியது இல்லை என்பதற்கு
இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து
வஸ்த்திரம் சாத்தும்
போது மற்றும் மஹா தீபாராதனை
காட்டும் போது தான் கதவை
திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு
செய்த அபிஷேக
எனர்ஜி எல்லாம் மொத்தமாக
உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும்
போது தான் கதவை அல்லது
திரையை திறப்பார்கள். அது
அப்படியே உங்களுக்கு வந்து
சேரும்
அது போக அந்த அபிஷேக நீரை
எல்லோருக்கும் தெளிக்கும்
போது உங்கள் உடம்பில் ஒரு
சிலிர்ப்பு வரும் காரணம்
இது தான். கோயிலுக்கு மேல்
சட்டை அணிந்து வர வேண்டாம் என
கூறுவதற்கும் இது தான் முக்கிய
காரணம் அந்த எனர்ஜி, அப்படியே
மார்பு கூட்டின் வழியே புகுந்து
உங்கள் உடம்பில்
சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும்
காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை
போன்று இதய
நோய் வராமல் இருக்கும் காரணம்
இந்த தங்க மெட்டல் இதயத்தின்
வெளியே நல்ல பாஸிட்டிவ்
எனர்ஜியை வாங்கி கொழுப்பை
கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு
கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
சாவி மற்றும் புது நகைகள்
இதையெல்லாம்
இங்கு வைத்து எடுத்தால் அந்த
உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி
கொள்ளுமாம். இது சில பேனாக்கள்
மற்றும் பத்திரிகை மற்றும்
எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து
எடுக்கும் இவர்களை என்னவென்று
கூறும் அறிவாளிகள் இதன்
எனர்ஜிதான் அங்கிருந்து இதில்
படும் என்பது தான் இதன் பிளஸ்
பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில்
இருந்து பயணம் செய்திருப்பினும்
அந்த சில நொடிகளில் தரிசனம்
கிட்டும்போது அந்த உடம்பில்
ஒரு மென்மையான சிலிர்ப்பும்,
ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி
வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய
பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ்
பாயின்ட் தான் இந்த கோயிலின்
மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி
மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும்
ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு
உண்டென்றால்
அது மிகையாகது..
கோயில் மேல் இருக்கும் கலசம் சில
சமயம் இரிடியமாக மாற இது தான்
காரணம். கீழ் இருந்து கிளம்பும்
மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும்
இடியின் தாக்கம் தான் ஒரு
சாதாரண கலசத்தையும்
இரிடியமாக மாற்றும் திறன்
படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும்
அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த
கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம்
இது தான் பிற்காலத்தில்
கண்டெடுக்கபட்ட
லைட்னிங் அரெஸ்டர்ஸ்..
அது போக கொடி மரம் இன்னொரு
இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி
பிரகாரத்தை காக்கும்
இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில்
கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட
ஒரு விஷயம் ஏன் என்றால்
எல்லா ஹை வோல்ட்டேஜெயும்
நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு
விஷயம். இடி இறங்கினால்
கோயிலின் கதவுகளில் உள்ள மணி
கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித
ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல
மானிடர்..
இருவேளை கோயிலுக்கு சென்று
வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல
அவனின் மனதும் மூளையும்
சுத்தமாகும். சுத்த சுவாதீனம்
இல்லாதவர்களை கூட கோயிலில்
கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்
என்பது தான்..
கோயிலின் மடப்பள்ளியில்
கிடைக்கும் புளியோதரை
ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த
டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார்
கிச்சனும் கொடுத்துவிட
முடியாது.. சில கோயில்களில்
இரண்டு அல்லது நாலு வாசல்
இருக்கும் காரணம் இந்த
எனர்ஜி அப்படியே உங்களுடன்
வெளியே செல்ல வேண்டும் எனற
மூத்தோர்கள் நமக்கு டெக்னாலஜி வகுத்த
சூத்திரம் தான் இந்த கோயில்
-----------------------------------------------

சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு என்று எனது நினைவு. பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.

தருமபுரம் மடம் வழியாக பரமாச்சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெளரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.

நாகஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் "அகில உலக நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்' என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில்தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.

அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு "என்ன விசேஷம்?' என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், "ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ' என்று பரமாச்சாரியார் உத்தரவிட்டு, பட்டணப் பிரவேச ஊர்வலத்துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்கவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.

பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாகஸ்வர சக்ரவர்த்தி சொன்னார்- "இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!'
-----------------------------------------------------------------------------------
 மகாளய பட்சம் - விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்

"மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.
இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.
நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
2
ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3
ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4
ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5
ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6
ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
7
ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8
ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9
ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10
ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11
ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12
ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்
13
ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14
ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15
ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.


--------------------------------------------------------------------------------------
நமது வீட்டு பூஜை அறையில்  பின் பற்ற  வேண்டிய குறிப்புகள் பற்றிப் பார்ப்போம் 
நாம் நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செய்ய வேண்டியனவும் , செய்ய கூடாதனவும் யாவை என்று பார்ப்போம் 

1.
தினசரி காலையும், மாலையும் தூய ( நல்ல சிந்தனையுடன்மனதுடன் சில நிமிடங்களாவது  கடவுள் ( பரம்பொருள் - சிவபெருமான்பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2.
தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3.
நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4.
வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5.
சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6.
செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7.
நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது  தான் துவாதசன தரிசனம் எனப்படும்.

8.
அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9.
அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10.
பொதுவாக பெண்கள்  நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்பூஜை செய்யக்கூடாது.

11.
பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12.
கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13.
சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் ( மலர்களைசூடக்கூடாது.

14.
வீட்டின் நிலைகளில் ( வாசற்காள்கள்குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15.
வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16.
அதிகாலை ( 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் இது பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17.
நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18.
ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19.
விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20.
ஓம்  ( பிரணவம்) என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21.
வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22.
சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23.
ருத்ரம், சமகம் கந்த சஷ்டி கவசம், சிவபுராணம், கோளாறு பதிகம், திருநீற்றுப் பதிகம்போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24.
நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25.
யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26.
பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27.
பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28.
பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும். கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும் 

29.
விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30.
ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31.
ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உடுத்தலாம்.

32.
சுப்ரபாதத்தை தினமும் காலை வேலையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

33.
பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடனும்  இரவு தூங்குவதற்கு முன்ன்னும்  சிவபெருமானையும் அவரின் திருநாமத்தையும் ( நமசிவாய, சிவாயநம, சிவயசிவ, சிவசிவ, சி, ) நினைக்க வேண்டும்.

34.
கஷ்டங்கள்  ( துன்பங்கள்) நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

35.
தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36.
விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37.
காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38.
விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது

39.
எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40.
ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41.
ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42.
வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.

43.
தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44.
புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45.
மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46.
தெய்வப் படம், குத்து விளக்குகளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47.
தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48.
வீட்டில் பூஜை செய்து முடித்ததும் திருநீறு கையில் வைத்துக் கொண்டு என் அடியார்கள்  எங்கு சென்றாலும் நான் அவனைப் பின் தொடர்ந்து செல்வேன்  என்று பரம்பொருள்  கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் திருநீறு  இருக்கும் வரை சிவபெருமானின்  துணை அவருக்கு தோன்றாய் துணையாய்  உண்டு.

49.
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50.
பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51.
வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம்
---------------------------------------------------------------------------------------------
அறியவேண்டியவை


1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)

2.
பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3.
விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4.
அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

5.
லட்சுமிக்குத் தும்பை கூடாது.

6.
பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

7.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.

8.
துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

9.
மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

10.
வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

11.
அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

12.
ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

13.
தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.

14.
வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

15.
சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

16.
மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

17.
முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

18.
துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.

19.
பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

20.
திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

21.
அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

22.
குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

23.
பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

24.
கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

25.
பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா.

26.
ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.
--------------------------------------------------------------

ஆன்மிகம் (Spirituality)  என்றால் என்ன?

நாம் யார், நமக்கும், இறைவனுக்கும், பிரபஞ்சத்திற்கும், மற்றும் உள்ள ஏனைய ஜீவராசிகளுக்கும்  பின்னால் உள்ள தொடர்பு என்ன? இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள உண்மை தத்துவம் யாது என்பதை உணரும் வழி முறையே ஆன்மிகமாகும்.

2.
ஆன்மிகத்திற்கும், மதத்திற்கும்  உள்ள  வேறுபாடு என்ன?

உண்மையான ஆன்மிகம்  எல்லா சமய, மத  கோட்பாடுகளை கடந்து நிற்பது. ஆன்மிக வழி முறைகள் மத சார்பற்ற முறைகளை கொண்டதுமதங்கள் பல்வேறு கோட்பாடுகளை முன்னிறுத்தி அவற்றை பின்பற்றுவதின் மூலம் வாழ்க்கை முறையை செம்மைபடுத்தவும், இறைவனை உணர வழி முறைகளை போதிப்பதும் ஆகும். ஆன்மிகமும், மதமும் சென்றடையும் இடம் ஒன்றாக இருப்பினும் பின்பற்றும்   வழி முறைகள் வேறு வேறு. அத்வைத வேதாந்தம், உபநிஷத்துகள் போதிப்பதும், ரமண மகரிஷியின் பல  போதனைகளும், ஸ்ரீ அரவிந்தர், அன்னை இவர்களின் போதனைகளும் மத கோட்பாடுகளை கடந்து நிற்கும் ஆன்மிக தத்துவங்களாகும்.

3.
உண்மை என்பது என்ன?

எது எப்பொழுதும்  சாஸ்வதமானதோ, எது என்றும் அழியாததோ, எது மாறுதலுக்கு என்றும் உட்படாததோ, அதுவே உண்மை என கருதப்படுகிறதுஉண்மைக்கு அப்பாற்பட்ட அனைத்துமே மாயை எனும் கோட்பாட்டிற்குள் வருகிறது. அப்படி பார்க்கும் போது நம் ஐம்புலன்களுக்கு பிரத்யட்சமாக புலப்படும் அனைத்துமே மாறக்கூடிய வஸ்த்துவே. காலம, நேரம், இடம், பொருள் அனைத்துமே என்றுமே மாறக்கூடிய ஒன்று. இவை அனைத்துமே அழியக்கூடிய வஸ்துவே.

உதாரணத்திற்கு ஒரு ரோஜா மலரை நாம் உண்மையான இருப்பாகிய அணுக்களாகவும், மூலக்கூறாகவும் காண்பதற்கு பதிலாக நம் மூளை ஏன் அழகான மலராக வடிவமைத்து தருகிறது? ரோஜாவின் வடிவம் நம் மூளையினாலேயே உருவாகிறதே அன்றி உண்மையான ரோஜா அவ்வடிவில் இல்லை. சூட்சமம் ஆகவே நம் மூளையில் மட்டுமே உள்ளது. வெளியில் இல்லை. இத்தத்துவம் போட்டோ கேமராவுக்கும் பொருந்தும்.
. 
ஒரு மரம் விழுந்தால் வரும் ஒலி, நம் செவிப்பறையில் பட்ட பின்பே ஒலியாக உருவாகிறது. அது வரை அது Electromagnetic Signal ஆக மட்டுமே இருக்க முடியும். ஒலி உருவாவது மூளையில் மட்டுமே. சூட்சமம் ஆகவே நம் மூளையில் மட்டுமே உள்ளது. வெளியில் இல்லை. இத்தத்துவம் டேப் ரெக்கார்டருக்கும் பொருந்தும்.

நம் மூளை வடிவமைப்பதாலேய நிறம், ஓளி, ஒலி, அளவு உருவாகிறதே அன்றி வெளியில் அவை அவ்வடிவில் நிச்சயமாக இல்லை. இதன் காரணமாகவே இதே Algorithm அடிப்படையிலேயே கனவும் உருவாக்கப்படுகிறது.

அனைத்து பொருள்களுமே வெற்றிடத்திலேயே உள்ளது. எல்லா பொருள்களுமே மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் வெற்றிடமாகவே உள்ளது. Space contains all Matter. All Matters contains Space only.

ஒரு கிராமபோன் ரெகார்டில் அல்லது கம்ப்யூட்டர் Hard Disk கில் பாடல் அல்லது படம் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் தான் பிரபஞ்சம் Atom + Space வடிவில் உள்ளது. நம் மூளையே அதை சூட்சமமாக வடிவமாக சிருஷ்டிக்கிறது.

எப்படி ஒரு நாயால் கருப்பு வெள்ளை நிறங்களை தவிர மற்ற நிறங்களை பார்க்க முடியாதோ அதேபோல் நம்மால் உணரமுடியாத Parameters எவ்வளவோ இருக்கலாம்.

நாம் காணும் அனைத்துமே நம் மூளையினால் உருவாக்கப்படும் Simulation மட்டுமே. இதில் நம் உடலும் சேர்த்து அடங்கும்.

ஒரு கோணத்தில் பார்த்தால் நாம் காணும் அனைத்துமே தொட்டு உணரக்கொடிய கனவு (Tangible Dream) என்றால் அது உண்மையே. ஆகவே பிறப்பும், இறப்பும் ஒரு கனவே. நாம் உண்மையில் என்றும் அழியாத Consciousness எனப்படும் இறை உணர்வே..

இதன்  காரணமாகவே ஜகம் எனப்படும் இந்த பிரபஞ்சமே மாய பிம்பமாக கருதப்படுகிறது. அப்போது என்றுமே மாறாதது என்ன? அழிவற்றது என்ன? அதுவே பிரபஞ்ச பேருண்மை. அதுவே இறைவன்.

4.
இறைவனுக்கும், நமக்கும், உண்மைக்கும் உள்ள தொடர்பு யாது?

மாறக்கூடிய அனைத்திற்கும் அடிப்படையாக மாறாத இருப்பு ஒன்று உள்ளது. அனைத்திற்கும் இதுவே அடிப்படை. இதுவே Consciousness எனப்படும்  உணர்வுநிலை. இந்த உணர்வுநிலை இந்த பிரபஞ்த்தையே உருவாக்கி தன்னுள் இயக்கம் பேராற்றல் பெற்றது. இறைவன் Consciousness  எனப்படும் பிரபஞ்ச பேருண்ர்வாகவுமகல், மண், முதலிய  மூலபொருள்களில் மயங்கிய நிலையிலும், தாவரங்களில் கனவு நிலையிலும், விலங்கினங்களில் மந்த நிலையிலும், மனிதனில் சற்றே விழித்த நிலையிலும் உள்ளது. ஆற்றல் வெவ்வேறாக இருப்பினும் அனைத்தும் ஒன்றின் மூலகூறே. அனைத்தும் இறைவனின் வெளிப்பாடே. எல்லாம் ஒன்றே.

5. 
இறைவனும் நாமும் ஒன்று என்றால் அதை நம்மால் உணர இயலாத காரணம் என்ன?

மனிதன் உடல், மனம், ஆன்மா (Body, Mind and Soul) என்பதின் கூட்டு பொருளே. இவற்றில் நாம் உடல், மனம், இவற்றிலே சதா சர்வகாலமும் உழன்று மாய்ந்து போகிறோம். நமது  99.99% செயல்பாடுகள் உடல், மனம்  சார்ந்தே உள்ளதுஆன்மாவின் உணர்வோ, அதை உணர வேண்டும் என்ற  ஆக்ஞ்சை இருந்தால் மட்டுமே இறைவனை நாம் உணர முடியும்ஆன்மா பற்றிய அதீத விழிப்புணர்வும், மட்டற்ற ஆர்வமுமே இறைவனை உணர வழிவகை செய்யும். இவ்வுணர்வு   சொல்லி வராது. இது சுயமாக வரவேண்டும். இறைவனின் அருளே இந்த ஆர்வத்திக்கு அடிப்படை தேவை.

6.
இறைவனை உணர்வதில் பூஜை, சாஸ்த்ர சம்பிரதாயங்கள்  இவற்றின் பங்கு என்ன?

இறைவனை உணர ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற வழிகளை பின்பற்றுகிறார்கள். உபதேச சாரம் பாடல் -4 ல் ரமண மகரிஷி பூஜை, ஜபம், தியானம் இவற்றில் முன் வருவதைவிட பின்வருவது  மேலும்  சிறந்தது என்று கூறுகிறார். ஒவ்வொருவரும்   தம்மால் இயன்ற வழிகளை பின்பற்றுவது இயற்கையே. இதில் குறை ஏதும் இல்லை.

7.
இறைவனை உணர்வது என்றால் என்ன?

தன்னை உணர்தல்  (Self Realization) என்பதே இறைவனுடன் கலப்பதாக பெரும்பாலான ஆன்மீகவாதிகளால் கூறப்பட்டுள்ளது. தன்னை உணர்தல் என்பது மனம் அடங்கப்பெற்று நாமும், இறைவனும், பிரபஞ்சமும், அனைத்து உயிரினங்களும்  ஒன்றே என்ற உணர்வு நிலையில் ( Unity consciousness )  இருப்பதாகும். இது சத் - சித் - ஆனந்த் எனப்படும் Existence- Consciousness-Bliss நிலை. இது மிகப்பெரிய உன்னதமான உண்மை நிலை. சாவிகல்பநிர்விகல்ப, மற்றும்  சஹஜ சமாதி நிலைகள் இதன் இறுதி நிலைகள்.   இவற்றில் முன் வரும் சமாதி நிலைகளைவிட பின்வருவது  நிலைபெற்றது. .

8.
வீடுபேறு (liberation) என்றால் என்ன?

பிறப்பு, இறப்பு என்னும் நிலைகளை கடந்த முக்தி நிலையே வீடுபேறு நிலையாகும்சம்ஸ்காரங்களும், வாசனைகளும் இருக்கும் வரை நமது பிறப்பு, இறப்பு எனும் சுழற்சி வட்டம் நம்மை  தொடர்ந்துகொண்டே இருக்கும். சஹஜ சமாதி நிலை பெற்று சம்ஸ்காரங்களும், வாசனைகளும் நீங்கப்பெற்றாலே வீடுபேறு எனும் முக்தி நிலையை அடைய இயலும்.

9.
பிறப்பு  இறப்பு  இவற்றை கடந்த நிலை  (Liberation) அடைவது எவ்வாறு ?

வீடுபேறு அடைவது பிறப்பு  இறப்பு  இவற்றை கடந்த நிலையாகும்தன்னை உணர்தல், சமாதி நிலை இவைகளை அடைவதே மிக உன்னத  நிலைகள். இவற்றிற்கும் மேல் வீடுபேறு அடைவது  என்னும் நிலை. இறைவனின் விருப்பபடியே  வீடுபேறு அடைவது  ஏதுவாகிறதுஒருவரால் வீடுபேறு அடைய முயற்சி  மட்டுமே செய்ய இயலும். இறைவனின் விருப்பபடியே  வீடுபேறு அடைவது ஏதுவாகிறது

10.
மனிதர்களாகிய நாம் செய்யவேண்டியதுதான் என்ன?

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்  ஏதோ ஒருவிதத்தில் நாம்  யார் என்று உணர இட்டு செல்லும் மார்க்கமே. நம்முடைய கர்மாவும் இதை ஒட்டியே அமைகிறது. கர்மா நமக்கு போதிக்கும் ஆசிரியர் போன்றதுஆகவே கர்மாவை கண்டு அஞ்சத்  தேவையில்லை. ஒவ்வொருவரின்  ஆன்மாவும்  தன்னை உணர பல்வேறு செயல்கள் மூலமாக வழிவகுத்துக்கொள்கிறது. ஒரு சிலர் இந்த விதத்தில் பரிணாமவளச்சியில் முன்னேறியும், ஒரு சிலர் பின் தங்கியும் உள்ளனர். ஆக மொத்தத்தில் அனைத்துமே இந்த பிரபஞ்சத்தில் முன்னேறிய படியேதான் உள்ளது. எனவே  இறைவனிடம் நம்மை  நிபந்தனையற்ற சமர்ப்பணம் (Unconditional Surrender) செய்வதே அனைத்திலும் சிறந்தது.


------------------------------------------------------------
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி
கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறு ஆதாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலணி அதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக் கொன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட
வித்தக வினாயக விரை கழல் சரணே!-
----------------------------------------------------------


40 Tips For Better Life From ISHA YOGA

1. Take A 10-30 Minutes Walk Every Day.
And While You Walk, Smile.

2. Sit In Silence For At Least 10 Minutes
Each Day.

3. Sleep For 7 Hours.

4. Live With The 3 E's -- Energy,
Enthusiasm, And Empathy.

5. Play More Games.

6. Read More Books Than You Did In 2014.

7. Make Time To Practice Meditation, Yoga,
And Prayer. They Provide Us With
Daily Fuel For Our Busy Lives.

8. Spend Time With People Over The Age Of
70 & Under The Age Of 6.

9. Dream More While You Are Awake.

10. Eat More Foods That Grow On Trees And
Plants And Eat Less Food That Is
Manufactured In Plants.

11. Drink Plenty Of Water.

12. Try To Make At Least Three People
Smile Each Day.

13. Don't Waste Your Precious Energy On
Gossip.

14. Forget Issues Of The Past. Don't
Remind Your Partner With His/her
Mistakes Of The Past. That Will Ruin Your
Present Happiness.

15. Don't Have Negative Thoughts Or
Things You Cannot Control. Instead
Invest Your Energy In The Positive Present
Moment.

16. Realize That Life Is A School And You
Are Here To Learn. Problems Are
Simply Part Of The Curriculum That Appear
And Fade Away Like Algebra Class
But The Lessons You Learn Will Last A
Lifetime.

17. Eat Breakfast Like A King, Lunch Like A
Prince And Dinner Like A Beggar.

18. Smile And Laugh More.

19. Life Is Too Short To Waste Time Hating
Anyone. Don't Hate Others.

20. Don't Take Yourself So Seriously. No
One Else Does.

21. You Don't Have To Win Every Argument.
Agree To Disagree.

22. Make Peace With Your Past So It Won't
Spoil The Present.

23. Don't Compare Your Life To Others'.
You Have No Idea What Their Journey
Is All About. Don't Compare Your Partner
With Others.

24. No One Is In Charge Of Your Happiness
Except You.

25. Forgive Everyone For Everything.

26.. What Other People Think Of You Is
None Of Your Business.

27. GOD ! Heals Everything.

28. However Good Or Bad A Situation Is, It
Will Change.

29. Your Job Won't Take Care Of You When
You Are Sick. Your Friends Will.
Stay In Touch.

30. Get Rid Of Anything That Isn't Useful,
Beautiful Or Joyful.

31. Envy Is A Waste Of Time. You Already
Have All You Need.

32. The Best Is Yet To Come.

33. No Matter How You Feel, Get Up, Dress
Up And Show Up.

34. Do The Right Thing!

35. Call Your Family Often.

36. Your Inner Most Is Always Happy. So
Be Happy.

37. Each Day Give Something Good To
Others.

38. Don't Over Do. Keep Your Limits.

39. When You Awake Alive In The Morning,
Thank GOD For It.

40. Please Forward This To Everyone You
Care About
😊😊😊

[23:41, 07/09/2015] ‪+91 94441 56261‬: 40 Tips For Better Life From ISHA YOGA

1. Take A 10-30 Minutes Walk Every Day.
And While You Walk, Smile.

2. Sit In Silence For At Least 10 Minutes
Each Day.

3. Sleep For 7 Hours.

4. Live With The 3 E's -- Energy,
Enthusiasm, And Empathy.

5. Play More Games.

6. Read More Books Than You Did In 2014.

7. Make Time To Practice Meditation, Yoga,
And Prayer. They Provide Us With
Daily Fuel For Our Busy Lives.

8. Spend Time With People Over The Age Of
70 & Under The Age Of 6.

9. Dream More While You Are Awake.

10. Eat More Foods That Grow On Trees And
Plants And Eat Less Food That Is
Manufactured In Plants.

11. Drink Plenty Of Water.

12. Try To Make At Least Three People
Smile Each Day.

13. Don't Waste Your Precious Energy On
Gossip.

14. Forget Issues Of The Past. Don't
Remind Your Partner With His/her
Mistakes Of The Past. That Will Ruin Your
Present Happiness.

15. Don't Have Negative Thoughts Or
Things You Cannot Control. Instead
Invest Your Energy In The Positive Present
Moment.

16. Realize That Life Is A School And You
Are Here To Learn. Problems Are
Simply Part Of The Curriculum That Appear
And Fade Away Like Algebra Class
But The Lessons You Learn Will Last A
Lifetime.

17. Eat Breakfast Like A King, Lunch Like A
Prince And Dinner Like A Beggar.

18. Smile And Laugh More.

19. Life Is Too Short To Waste Time Hating
Anyone. Don't Hate Others.

20. Don't Take Yourself So Seriously. No
One Else Does.

21. You Don't Have To Win Every Argument.
Agree To Disagree.

22. Make Peace With Your Past So It Won't
Spoil The Present.

23. Don't Compare Your Life To Others'.
You Have No Idea What Their Journey
Is All About. Don't Compare Your Partner
With Others.

24. No One Is In Charge Of Your Happiness
Except You.

25. Forgive Everyone For Everything.

26.. What Other People Think Of You Is
None Of Your Business.

27. GOD ! Heals Everything.

28. However Good Or Bad A Situation Is, It
Will Change.

29. Your Job Won't Take Care Of You When
You Are Sick. Your Friends Will.
Stay In Touch.

30. Get Rid Of Anything That Isn't Useful,
Beautiful Or Joyful.

31. Envy Is A Waste Of Time. You Already
Have All You Need.

32. The Best Is Yet To Come.

33. No Matter How You Feel, Get Up, Dress
Up And Show Up.

34. Do The Right Thing!

35. Call Your Family Often.

36. Your Inner Most Is Always Happy. So
Be Happy.

37. Each Day Give Something Good To
Others.

38. Don't Over Do. Keep Your Limits.

39. When You Awake Alive In The Morning,
Thank GOD For It.

40. Please Forward This To Everyone You
Care About

ரமணரின் உபதேசங்கள் மனதை சுற்றியே வழங்கப்பட்டுள்ளன .ஆத்ம விசாரம் தன்னையே தான் உணர்தல் ! இதுதான் அவரின் அடிப்படை உபதேசம்! நீ யார் என்ற கேள்விக்கு விடை தேடு , அதிலேயே சகல ஞானமும் ஒளிந்திருக்கிறது .அடிப்படை சாதாரண மனிடர்களுக்கு விளங்காத ஆத்ம விசாரம் ,நுட்பமானது !சகலத்தையும் உள்ளடக்கி ,நிதர்சனமாய் பரவி நிற்பது !

மனதின் துணை கொண்டுதான் மனதை கடக்கவேண்டும்.அதற்க்கு மனதில் உள்ள எண்ணங்களை காலி செய்ய வேண்டும்.
மீண்டும் எண்ணங்கள்  நிரம்பாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கடந்தகால பதிவுகள் முற்றிலுமாக நீக்கப்படவேண்டும்.

எதிர்பார்ப்பிலாமல் நிகழ்காலத்தில்
வாழ மட்டும் மனதை பழக்கப்படுத்த வேண்டும்.

ஆன்ம விசாரணை என்பது தொடர்ந்து நமக்குள் நடைபெற வேண்டிய ஒன்று.
அதன் நன்மையை அவரவர் தனக்குள் அனுபவித்துதான் அறிந்து கொள்ள முடியுமே அன்றி பிறர் விவரித்து அறிந்து கொள்ளமுடியாது.

மனதை கடந்தவன் எதற்கும் பதட்டப்பட மாட்டான்,பயப்படமாட்டான் எதற்கும் வருந்தமாட்டான்.

மனதில் ஆசைகள் தானே குறைந்து கொண்டேவரும். எல்லாவற்றின் மீதும் கொள்ளும் மோகம் படிப்படியாக குறைந்துகொண்டே வரும்

மனம் எந்த சூழ்நிலையிலும் அமைதியாய்  இருக்கும். இதெல்லாம் நாம் ஆன்ம விசாரணையை தொடர்ந்து
செய்து வந்தால் கிடைக்கும் நன்மைகளாகும்.

மனிதனாய் பிறந்தும் அந்த வஸ்துவை அறிந்துகொள்ள முயற்சிக்காதவன் விலங்கை விட இழிந்தவன். ஏனென்றால் சிலந்திபூச்சியும் யானையும், பசுவும், கூட இறைவனை வணங்கி முக்தி பெற்றிருக்கின்றன.

வாழ்நாள் முழுவதும் காமகேளிக்கைகளில்மூழ்கி கிடக்கும்மனிதர்களுக்கு
இறைவனை பற்றி சிந்திக்க ஏது நேரம்?

விழித்ததுமுதல் விழி மூடும் வரை காசு காசு காசுதான். அதனாலேதான் காசாலேசா என்றார்கள் மூடர்கள்
அதன் உண்மை பொருள் புரியாமல்
காசாலேசா என்பதன் பொருள்
காசாலே சா பணம் பணம் என்று பிணமாகும் வரை அலைந்து திரி. என்று பொருள் .
--------------------------------------------------------------------
லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.
இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.
அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.
தல வரலாறு :
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. “சப்தம்‘ என்றால் ஏழு.
திருவாரூரில் “வீதி விடங்கர்’, திருநள்ளாறில் “நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்’, திருக்குவளையில் “அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை “தியாகராஜர்’ என்பர்.
வழிபாடு நேரம் :
காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம் 
காலை 8 மணி - முதற் கால பூஜை 
மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம் 
பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை 
பகல் 12.30 மணி - அன்னதானம் 
மாலை 4 மணி - நடை திறப்பு 
மாலை 6 மணி - சாயரட்சை பூஜை 
இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம் 
இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
பிரதான மூர்த்திகள் :
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள். இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜ
--------------------------------------------
Works of Adi Shankarcharya ji

A list of all the works by Shri Adi Shankaracharya ji is given
below. Even today many scholars wonder how was it
possible for Acharya to write so much in a very short life
span of 32 years. It depicts that he was the greatest scholar
and a man on mission to teach & establish the
philosophy of Advaita Vedanta. Though majority of his
works concentrate on Advaita, he equally pitches on
bhakti since he believed that bhakti was a very essential
step for Chitta Shuddhi without which Self-realization was not
possible. Hence he composed verses and hymns in praise
of every lord, majority of which were concentrated on
Vishnu, Shiva and Shakthi. He wanted the people to worship
the lord in any form of their wish, the results of which must
finally purify their mind and make it fit for self realization.
From his life history it is evident that he was blessed
by Lord Narasimha, Goddess Saraswati and Lord
Vishvanatha. Hence one can find a true Vasihnava, Shaiva
and Shaakta in him. The most highlighting factor is the
baashya for Hastamalakeeyam written by Shri Shankaracharya ji since
rarely a Guru has written baashya for the work of his own
disciple. Below is the list of works by Shri Adi Shankaracharya ji which are
widely accepted to be his works.

Bhashya Granthas
1. Brahma Sutras
2. Isavasya Upanishad
3. Kena Upanishad
4. Katha Upanishad
5. Prasna Upanishad
6. Mundaka Upanishad
7. Mandukya Upanishad
8. Mandukya Karida
9. Aitareya Upanishad
10. Taittireeya Upanishad
11. Chhandogya Upanishad
12. Brihad Aranyaka Upanishad
13. Sree Nrisimha Taapaneeya Upanishad
14. Sreemad Bhagawad Geeta
15. Sree Vishnu Sahasranama
16. Sanat Sujateeyam
17. Lalita Tri-satee
18. Hastaamalakeeyam

Prakarana Granthas
19. Viveka Chudamani
20. Aparokshanubhooti
21. Upadesa Sahasri
22. Vaakya Vritti
23. Swaatma Niroopanam
24. Atma-bodha
25. Sarva Vedanta Sara Samgraha
26. Prabodha Sudhakaram
27. Swaatma Prakasika
28. Advaita anubhooti
29. Brahma anuchintanam
30. Prashnouttara Ratnamaalika
31. Sadachara anusandhanam
32. Yaga Taravali
33. Anatmasree Vigarhanam
34. Swaroopa anusandhanam
35. Pancheekaranam
36. Tattwa bodha
37. Prouda anubhooti
38. Brahma Jnanavali
39. Laghu Vakyavritti
40. Bhaja Govindam
41. Prapancha Saaram

Hymns and Meditation Verses
42. Sri Ganesa Pancharatnam
43. Ganesa Bhujangam
44. Subrahmanya Bhujangam
45. Siva Bhujangam
46. Devi Bhujangam
47. Bhavani Bhujangam
48. Sree Rama Bhujangam
49. Vishnu Bhujangam
50. Sarada Bhujangam
51. Sivananda Lahari
52. Soundarya Lahari
53. Ananda Lahari
54. Sivapaadaadi kesaanta varnana
55. Siva kesaadi padaanta varnana
56. Sree Vishnu-paadaadi-kesanta
57. Uma maheswara Stotram
58. Tripurasundari Vedapada Stotram
59. Tripurasundari Manasapooja
60. Tripurasundari Ashtakam
61. Devi shashti upachara-pooja
62. Mantra matruka Pushpamaala
63. Kanakadhara Stotram
64. Annapoorna Stotram
65. Ardhanareshwara Stotram
66. Bhramanaamba Ashtakam
67. Meenakshi Stotram
68. Meenakshi Pancharatnam
69. Gouri Dasakam
70. Navaratna Malika
71. Kalyana Vrishtistavam
72. Lalitha Pancharatnam
73. Maaya Panchakam
74. Suvarna Mala Stuti
75. Dasa Sloki
76. Veda Sara Siva Stotram
77. Siva Panchaakshara Stotram
78. Sivaaparadha Kshamapana
79. Dakshinamoorthy Ashtakam
80. Dakshinamoorthy Varnamala
81. Mrutyunjaya Manasa Pooja Stotram
82. Siva Namavali Ashtakam
83. Kaala Bhairava Ashtakam
84. Shatpadee Stotram
85. Siva Panchakshara Nakshatra Mala
86. Dwadasa Ling Stotram
87. Kasi Panchakam
88. Hanumat Pancharatnam
89. Lakshmi-Nrisimha Pancharatnam
90. Lakshmi-Nrisimha Karunarasa Stotram
91. Panduranga Ashtakam
92. Achyuta Ashtakam
93. Sree Krishna Ashtakam
94. Hari Stuti
95. Govinda Ashtakam
96. Bhagavat Manasa Pooja
97. Praata Smarana Stotram
98. Jagannatha Ashtakam
99. Guruvashtakam
100. Narmada Ashtakam
101. Yamuna Ashtakam
102. Ganga Ashtakam
103. Manikarnika Ashtakam
104. Nirguna Manasa Pooja
105. Eka Sloki
106. Yati Panchakam
107. Jeevan Mukta Ananda Lahari
108. Dhanya Ashtakam
109. Upadesa (Sadhna) Panchakam
110. Sata Sloki
111. Maneesha Panchakam
112. Advaita Pancharatnam
113. Nirvana Shatakam
114. Devyaparadhakshamapana Stotram

Jaya Jaya Sankara! Hara Hara Sankara

----------------------------------------------------------------
சிவசிவ

தர்பைப்புல்

ஒரு காலத்தில் தம்போத்பவா என்ற மாபெரும் மன்னன் விதர்பா நாட்டிலே  இருந்தான். அவன் பல புண்ணியங்களையும் செய்து கொண்டே இருந்ததினால் அவனுக்கு  பெரும் வரங்கள் கிடைத்து இருந்தன. அவன் உலகெங்கும் சுற்றி அனைத்து நாடுகளையும் வென்றவன். அவனே மகாபாரதத்தில் உத்யோக பர்வ காண்டம் 99 தில்  கூறப்பட்டு உள்ள மன்னன் ஆவான். இனி அவன் வெல்வதற்கு நாடுகளே இல்லை என்ற நிலை வந்தபோது, அவனுடைய ராஜ குரு கூறினார் 'மன்னா இனி நீங்கள் ஏன் பூமியில் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். தேவ லோகத்துக்குச் சென்று அங்குள்ள ரிஷி முனிவர்களையும் வெற்றிக் கொள்ள வேண்டும். அதுவே இனி உங்கள் பெருமைக்கு தகுந்ததாக அமையும்'.
அதைக் கேட்ட மன்னனுக்கும் ஆசை துளிர் விட்டது. ஆகா...நாம் உண்மையிலேயே மிகப் பெரிய மன்னன் ....பூமியிலேயே அனைத்தையும் வென்று விட்ட நான் தேவலோகம் சென்று அதையும் வென்று வர வேண்டும் என எண்ணத் துவங்கினான். அப்படி எண்ணியவன் ஒருநாள்  பெரும் படையுடன் கிளம்பி தேவலோகத்துக்குச் சென்றான். படையினரை தேவலோகத்தின் வாயிலிலேயே நிற்க வைத்தப் பின் நேராக பிரும்மாவிடம் சென்றவன் தான் வந்தக் காரியத்தைக் குறித்துக் கூற   பிரும்மா  அவனுடைய அகங்காரத்தை அடக்க முடிவு செய்தார்.  பிரும்மா கூறினார் ' தம்போத்பவா, நீ இன்னமும் பூமியில் உள்ள சிலரை வெற்றி கொள்ளாமல் இங்கு வந்து என்னப் பயன்...போ...முதலில் அங்கு சென்று அவர்களை வென்றுவிட்டு வா'. தம்போத்பவா வியப்புற்றான். பூமியில் நான் வெல்ல இனியதும் யாரும் இருக்கின்றார்களா என ஆச்சர்யமாக அவரிடம் கேட்க, பிரும்மா பூமியில் வட பகுதியில் இருந்த காந்தாமதானா என்ற பகுதியில் உள்ள நதிக்கரையில் அமர்ந்து இருந்த இரண்டு தேவ முனிவர்களை வெற்றிக் கொண்டு விட்டு தேவலோகத்துக்கு வருமாறு கூறி அனுப்பினார்.
தம்போத்பவாவும் உடனே கிளம்பி காந்தாமதானாவிற்குச் சென்றான். அங்கு  ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தபடி தவத்தில் இருந்த இரண்டு முனிவர்களைப் பார்த்தான்.  இவர்களையா  நான் வெல்ல வேண்டும்?, பிரும்மாவிற்கு புத்தி பேதலித்து விட்டதா என்று எண்ணியவன் அவர்கள் எதிரில் சென்று நின்றுகொண்டு அவர்களுடைய தவத்தைக் கலைத்தான். கண்களை விழித்தவர்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டப் பின்னர் அவர்கள் தம்முடன் சண்டை இட்டு ஜெயிக்க வேண்டும் இல்லை என்றால் சரணாகதி அடையத் தயாராக இருக்க வேண்டும் என இறுமாப்புடன் கூறினான். அவர்களை சுற்றி தர்பைப் புல் வைக்கப்பட்டு இருந்தது. முனிவர்கள் கூறினார்கள் 'தம்போத்பவா, நீ ஒரு பெரிய மன்னன். ஆனால் நாங்கள் முனிவர்கள். நாங்கள் ஏன் உன்னுடன் சண்டைப் போட வேண்டும். நீ உன் வழியில் போ, நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்' என்றார்கள். ஆனால் அது மன்னன் மனதில் ஏறவில்லை, அவர்களின் தவத்தை இடையூறு செய்தவண்ணம் வாளை உறுவி வைத்துக் கொண்டு அவர்களை சண்டைக்கு அழைத்தான்.
எத்தனை நேரம்தான் விதண்டாவாதம் செய்வது என எண்ணிய முனிவர்கள், தமது முன்னால் வைத்து இருந்த ஒரு கட்டு தர்பை புற்களை எடுத்து அவன் மீது வீசினார்கள். அந்த ஒரு கற்று தர்பைப் புல் பல கற்றுகளாக மாறி அவனைத் தாக்கத் துவங்கின. அவன் தனது வாளினால் தர்பைகளை வெட்ட வெட்ட அவை பெருகிக் கொண்டே போனது மட்டும் அல்லாமல் அவன் கேடயங்களும் அவன் மீது விழுந்து கொண்டு அடிகளை தடுக்க முடியாமல் திணறி இரண்டாக உடைந்து விழுந்தது. தர்ப்பைப் புற்கள் அவன் உடலெங்கும் கீறிக் கீறிக் காயப்படுத்த, அவனால் சண்டை இட முடியாமல் அப்படியே முனிவர்கள் முன்னால் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். உடலெங்கும் ரத்தம் வழிய  தமது காலடியில் விழுந்து கிடந்தவனை எழுப்பினார்கள் முனிவர்கள். உடல் முழுதும் வழியால் துடிதுடித்தபடிக் கிடந்தவன் எழுந்திருந்தான். 'முனிவரே ஒரு தர்பைப் புல் என் அனைத்து ஆயுதங்களையும் வலுவிழக்கச் செய்துவிட்டதை எண்ணி வியக்கின்றேன் . அதற்கு அத்தனை மகிமையா ?' என்று கேட்டதும்  அவன் முன்னால் நாரத முனிவர் அமைதியாக சிரித்துக் கொண்டே காட்சி தந்தார். மீண்டும் மீண்டும் அவரிடம் தனது அறியாமையினால் ஏற்பட்ட தவறைக் கூறி தன்னை மன்னிக்குமாறு கேட்டதும் நாரதர் கூறினார் ' மன்னா அகங்காரம் தன்னையே அழிக்கும் என்பது பழமொழி. அதற்கு உதாரணமாக நீயே இருக்கிறாய். தர்பையை என்ன அத்தனை கேவலமாக நினைத்து விட்டாயா?
தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார் . அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார். அவரது கீழ் வலது கை மூலம் ஞான முத்திரையை காட்டுவார். அந்த தக்ஷிணாமூர்த்தி யார் தெரியுமா ? சிவபெருமான்... ஆமாம் அவர் சிவபெருமானின் ஒரு ரூபம் ஆவார். அப்படிப்பட்டவர் கையில் உள்ள தர்பையை வேறு யாரிடமாவது காண முடியுமா? அப்படிப்பட்டவர்  கையில் வைத்துள்ள தர்பையை நீ வெறும் புல்லாகவா நினைக்கின்றாய்?.  அதை எதற்காக அவர் தனது கையில் வைத்து இருக்கின்றார் தெரியுமா? தியான நிலையில் உள்ளவர் கையில் ஆயுதம் வைத்து இருக்கக் கூடாது. ஆனால் அதே சமயத்தில் தியானத்தை தடுக்க வருபவர்களை ஆயுதமாக அது மாறி தாக்க வல்லமைக் கொண்ட சக்தியை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ளதே  தர்பை என்பதை அவர் மூலம் அறிய முடிகின்றது.  நமக்கு ஏற்படும் பல கெடுதல்களையும் போக்கவல்லது தர்பை என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. அதனால்தான் நல்லதோ, கேட்டதோ, இரண்டு காரியங்களை செய்யும் போதும் தர்பையினால் ஆனா மோதிரத்தை ஒரு சம்பிரதாயமாக அணிந்து கொண்டே காரியங்களை செய்கிறோம். ஹோம குண்டங்களில், யாக குண்டங்களில் நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.  எந்த சடங்கையும் செய்யும்போது அதை ஏன் விரலில் ஒரு மோதிரம் போல போட்டுக் கொள்கின்றோம் தெரியுமா? அந்த நேரத்தில் விரல் என்பது நமது உடலைக் குறிக்கின்றது. ஆகவே நமது உடலை சுற்றி நம்மைக் காப்பது ஒரு சக்தி. அந்த சக்தியாகவே பாவிக்கப்படுவதே தர்ப்பைப் புல். தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது. எளிய முனிவர்களுக்குக் கவசமாக உள்ள அப்படிப்பட்ட தர்பையே சக்தியாக உருவெடுத்து உன்னைத் தாக்கி அழித்தது'. இப்படியாக நாரதர் கூறியதைக் கேட்ட தம்போத்பாவா வெட்கி தலைக் குனிந்தான். அவரை வணங்கி துதித்து விட்டு நாட்டிற்குத் திரும்பியவன் முதலில் ராஜ குருவை அரண்மனையில் இருந்து துரத்தி அடித்தான்.  அடுத்து  தனது அனைத்து அரசையும் வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டு தக்ஷிணாமூர்த்தியின் பக்தனாக மாறி தனது கடைசி  காலத்தை அமைதியாக கழித்தான்.

தர்ப்பைப் புல்

தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்ம் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் செய்கிறார்கள். அவை பல நாள் ஒலியுடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பல நாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரஹணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தொற்று நோய்கள் இதன் காற்று படும் இடங்களில் இருக்காது.
-----------------------------------------------------------------------
கேள்வி - தியானத்தில் வெற்றி பெற பக்தி உதவுகிறதா ? புலனடக்கம் உதவுகிறதா ?

இராம் மனோகர் - உண்மையான பக்தனுக்கு புலனடக்கம் தானே அமைந்து விடும். பக்தி என்பது நம் மேல் நிலை மனதை செயல்படச் செய்யும் யுக்தியே
ஆகும். தறி கெட்டு அங்குமிங்கும் ஓடும் கீழ் நிலை மனதை தன்னை நோக்கி மேல் நிலை மனமானது ஈர்க்க வேண்டும். இந்த மேல் நிலை மனம்தான் இதயத் தாமரை எனப்படுகிறது. அது கீழ் நிலை மனதை ஈர்க்க வேண்டும் என்றால், கீழ் நிலை மனமானது புற விஷயங்களில் இருந்து விடுபட்டு தூய்மையடைய வேண்டும். அதற்குத்தான் இந்த பக்தி, பிரார்த்தனை, ஜபம், மன ஒருமைப்பாடு, பிரம்மச்சரியம் இவையெல்லாம் சாதனங்களாக அமைகின்றன. மலர்ந்த இதயத் தாமரையில் போய் நம் மனமானது குவிகின்ற நிலையே தியானம். மாறாக மனத் தூய்மை இன்றி நாம் செய்கின்ற மன ஒருமைப்பாட்டு பயிற்சிகளெல்லாம் தியானமாகாது. அவை வெறும் தியான முயற்சிகள்.

தியானம் என்பது நம்முள் ஆன்மாவைக் காண்பது என்ற உன்னத நிலையை அடைய விரும்பும் சாதனம் மட்டுமல்ல, மன அமைதி, புத்தி கூர்மை, சமயோஜிதம், அறிவில் தெளிவு, ஞானம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பல அற்புத ஆற்றல்களையும் தரவல்லது. பக்தி உருகுவது என்றால், தியானம் என்பது உறுதி பெறுவதாகும். பக்தி இறைவன் மேல் பற்றினை வளர்த்து இறுதியில் சூன்யத்தை(வெட்ட வெளியை) அடைவதாகும். தியானத்தில் பற்றுகளை அறுத்து தவத்தில் நிலைத்து வெட்ட வெளியை அடைவதாகும். பக்தியில் மனதின் செயல்பாடுகளே முக்கியத்துவம் பெறுகின்றன. தியானத்திலோ, கர்ம இந்திரியங்கள், ஞான இந்திரியங்கள், அந்த கரணங்கள், புலன்கள் என்று அனைத்தும் சீரமைக்கப்படுகின்றன. எனவேதான் விரைவாக மேல் நிலையை அடைய முடிகிறது.

பொதுவாக புலன்களை அடக்குவது என்பார்கள். ஆனால், உண்மையில் அடக்குவது என்பது தவறான பதமாகும். ஒடுக்குவது என்று சொல்வதே சரியாகும். அதாவது புனிதப்படுத்துவது. அடக்குவதற்கும் புனிதப்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குருட்டு நம்பிக்கையாலோ, பண்படாத உற்சாகத்தாலோ, கண்மூடித்தனமான வழக்கத்தாலோ பலவந்தமாக ஒன்றை வேண்டாம் என்று தள்ளுவது அடக்குவதாகும். அவ்வாறல்லாமல், காரணங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, மனதிலுள்ள தவறான கருத்துக்களை அகற்றுவதன் மூலமாக செய்யப்படும் மறுப்பு புனிதப்படுத்துவதாகும். புலன்கள அடக்குவதால் மனிதன் சீரழிந்து போகிறான். புலன்களைப் புனிதப் படுத்துபவனே பெருவாழ்வு வாழ்வான்.

அதாவது ஒரு சாதகனின் கண்களுக்கு உலகம் துன்பங்கள் நிறைந்ததாகவே தோன்றும். ஏனென்றால் அவன்அறிவின் உச்சத்தில் நின்று உலகைக் கவனிக்கிறான். சக்தி மிகுந்த விவேகமான புத்தியின் பிரகாசத்தைக் கொண்டு காணும் போது நம்மை, நம் அறிவை மயக்குகிற இந்த உலகாய விஷயங்களெல்லாம் பொய்யானவை என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்கிறான். எனவே ஞான வீதியில் நடப்பவனுக்கு உடலை ஒடுக்கவும், புறக்கணிக்கவும், அதனின்று விலகி நிற்கவும் நிறைய சக்தி இருக்கிறது. மனதோடும், புத்தியோடும் முழுவதுமாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவும் அவனால் முடிகிறது. இதையே ஒடுக்கம் என்கிறோம். இதுவே புனிதப் படுத்திக் கொள்வது. அதாவது புலன்கள் மீதான மனதின் பழைய எண்ணங்களை நீக்குவது, புதிய எண்ணங்களை சீரமைப்பது இதுவே புலனடக்கம் எனப்படுகிறது. எனவே இரண்டுமே தியான முயற்சியில் முக்கியமான வெவ்வேறு படித்தரங்களே. நல்ல பக்தனுக்கு மனம் தூய்மையடைந்து விடுவதால் அவன் புலன்களும் அவனுக்கு வசப்படுகின்றன. பக்தி என்றால் உருவ வழிபாடு மட்டுமே என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.
---------------------------------------
ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?

இளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.
கோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள்.
கடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.
அவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..
“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்?”
“அனந்தா... எனக்கு எப்படி அவரின் நிலை தெரியும்? ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.

சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.
எனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.
அதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...
கண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.
“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே? என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....
அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...
ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.
கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.
தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....
முழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...
மெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...
ஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..”
சித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...
சத்குரு பிரபுலிங்கா பிரம்ம சொரூபத்தை அவருக்கு அளிக்கதுவங்கினார்...
---------------------------------------------------------------
ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..

இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

- ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம்.
------------------------------------------------------------
ஈரேழு பதினான்கு லோகங்கள்:
அவைகள்: மேல்/கீழ் என இரு பிரிவுகளாக உள்ளது|
மேலேயுள்ள ஏழு லோகங்கள்:
பிரம்ம-லோகம்
மகா-லோகம்
ஜன-லோகம்
தப-லோகம்
சொர்க்க-லோகம்
புவர்-லோகம்
(பித்ரு வஸிப்பிடம்)
பூ-லோகம்
கீழேயுள்ள ஏழு லோகங்கள்:
அதல-லோகம்
விதல-லோகம்
சுதல-லோகம்
தலாதல-லோகம் மகாதல-லோகம் ரஸாதல-லோகம் பாதாள-லோகம்
இவற்றில் நமது வஸிப்பிடம் பூலோகம் இது ஒரு கர்மபூமி' இங்கு கர்ம அடிப்படையிலான கோள்களின் ஆதிக்கம் கொண்டது. யோனிவழி பிறப்பு என்பதே இங்கேயுள்ள நியதி|
கோளாதிக்கத்தின் அடிப்படையில் இங்கே ஜனிக்கும் உயிர்கள் இருவகையிலான கர்மங்களைப் பெறுகின்றன!
ஸத்கர்மம் - புண்ணியம் துஸ்கர்மம் - பாவம்
இந்தக் கர்மக்கோட்பாடுகளால் பாவ புண்ணியங்களைச் சேர்க்கின்றான். இறுதியில் தான்சேர்த்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு மேல் லோகங்களையோ அல்லது கீழ் லோகங்களை அடைகிறான். கீழ்லோகங்களை அடைந்தவர்கள் மீண்டும் பூமியில் பிறக்கிறார்கள்!
மேலுள்ள லோகத்தில் சொர்க்கலோகம் புவர்லோகம் சென்றவர்கள் மட்டும் பூலோகத்தில் தர்மம் நிலைநாட்ட வேண்டி மீண்டும் பிறக்கிறார்கள். மகாலோகம், ஜனலோகம்,தபலோகம் சென்றவர்கள் மீண்டும் பிறவாநிலையை அடைந்து அங்கேயே தங்கிவிடுகிறார்கள்! அவர்கள் பிரளயகாலம் வரை அங்கேயே வாழ்ந்திருந்து இறுதியில் இறைவனோடு கலந்துவிடுகிறார்கள்!
பிரம்மத்தை உணர்ந்தவர்களும் தெய்வ அனுக்கிரகம் பெற்றவர்களும் பிரம்மலோகத்தை அடைந்து பிரளய இறுதிவரை அங்கேயே நிலைப்பெற்று வாழ்ந்து இறுதியில் ஜிவ ஆத்மாவான அவர்கள் ப்ரபிரம்மத்தோடு ஒன்றிணைந்து விடுகிறார்கள்|
பகவான் கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார் (9:25 ஸ்லோகம்)
தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களை அடைகிறார்கள் பித்ருக்களை வணங்குபவர்கள் சந்திரமண்டலத்திற்கு அருகிலுள்ள பித்ருக்களை அடைகிறார்கள் -பித்ருலோகம் பற்றி ஸ்ரீவிஷ்ணுபுராணம் பித்ருகீதம் என்ற தலைப்பிலுள்ள ஸ்லோகம் கூறுகிறது!
பூதகணங்களை வணங்குபவர்கள் பூதகணங்களை அடைகிறார்கள் என்னை வணங்குபவர்கள் என்னை அடைகிறார்கள்! எவர் பகவானாகிய என்னை முழுவதுமாக சரணடைந்து விடுகிறார்களே அவர்கள் பிதிர்கடனிலிருந்து விடுபடுகிறார்கள்! என்கிறார் கிருஷ்ணர்!
உபகோசல வித்யை அதிகாரம் 4:15.5 சொல்வது எவரொருவர் தனது வாழ்நாளில் ஆன்மீக கர்மங்கள் அதிகம் செய்கின்றாரோ அவர்கள் இறையனு பூதியுடன் பிரம்மத்தை உணர்ந்தவராய் நேரடியாக பிரம்ம லோகம் செல்கிறார்! இறுதியில் ப்ரபிரம்மத்தோடு இணைகிறார்!
--------------------------------------------------------
கங்கையும் பம்பையும்!

பந்தளமன்னர் ராஜசேகரன், தன் மகன் மணிகண்டன் பிரிந்து சென்ற வருத்தத்தில் இருந்தார். அப்போது, அவருக்கு ஆறுதல் கூறும் வகையில், அகத்தியர் ஒரு கதையைச் சொன்னார். ஒருமுறை, கங்கையில் நீராடிய ராம லட்சுமணரும் சீதாவும், பிதுர்களுக்கு (மறைந்த முன்னோர்) திதி செய்தனர். அன்றைய காலகட்டத்தில், பிதுர்கள் நேரில் வந்து பிண்டம் பெற்றுச்செல்வது வழக்கம். சீதாதேவி மட்டும் ராமலட்சுமணருடன் அமராமல், தனியாக அமர்ந்து திதி கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது தசரதர் வந்தார். தன் பிள்ளைகளிடம் பிண்டம் பெறாமல், மருமகளிடம் பிண்டத்தை வாங்கிக் கொண்டு மறைந்து விட்டார். இதைக்கண்ட ராமபிரானுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆஞ்சநேயரை வரவழைத்து, சத்திய லோகத்தில் இருக்கும் தன் தந்தையை உடனே அழைத்து வர உத்தரவு போட்டார். ஆஞ்சநேயரும் மிக விரைவில் அவரை அழைத்து வந்தார்.தந்தையே! பெற்றவர்கள் பிள்ளைகள் கையால் பிண்டம் பெறுவது தான் உலக நியதி. நீங்களோ, மருமகளிடம் பிண்டம் பெற்றுச் சென்றீர்களே! ஏன் இப்படி செய்தீர்கள்? என பணிவோடு கேட்டார்.
மகனே! நீ கடவுளின் அவதாரம். ஆனால், நான் வாழ்ந்த காலத்தில், உன்னை என் மகனாக எண்ணி, நீ காட்டுக்குப் போன காலத்தில் மனம் வருந்தியிருக்கிறேன். பாசபந்தம் என்ற கட்டில் சிக்கித் தவித்தேன். நான் ஞானமார்க்கத்தை தேடிய போது தான், இந்த வாழ்வு பொய்யானது, மாயை என்ற உண்மையை உணர்ந்தேன். அதன் பின் தான் ராமன் தான் சீதை, சீதை தான் ராமன், உலகிலுள்ள எல்லா உயிரும் ஒரே இடத்திலிருந்தே உற்பத்தியானவை, மாயையில் இருந்து விலகிய பின் அவை வந்த இடத்தையே சென்று சேரும் என்பதை உணர்ந்தேன். எல்லாரும் ஒன்று என்றான பிறகு, சீதையிடம் இருந்து பிண்டத்தை ஏற்றாலும், உன்னிடமிருந்து ஏற்றாலும் ஒன்று தானே என அவளிடம் பிண்டத்தைப் பெற்றேன், என்றார்.தந்தையே! தங்கள் விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும், சாஸ்திர முறையை மீறியதாக உள்ளது. அதை மீறியது என் தந்தையே என்றாலும், அதை நான் ஏற்பதற்கில்லை. எனவே, இனிமேல், பிண்டம் பெற பிதுர்கள் யாரும் நேரில் வரக்கூடாது. அது அவர்களை வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்வேன், என்று ஒரு விதிமுறையை உருவாக்கினார். கங்கை போன்றே, சபரிமலையிலுள்ள பம்பையும் புனிதமானது. அங்கும் பிதுர்களுக்கு திதி கொடுக்கலாம். பம்பை நதி நீரே பொன்னம்பல மேட்டிலுள்ள ஐயப்பனுக்கு முனிவர்கள் அபிஷேகம் செய்கிறார்கள். இவ்வாறு கதையை முடித்தார் அகத்தியர். தசரதர் போன்றே, தெய்வப்பிறவியான மணிகண்டனை, தன் சொந்த மகனாக எண்ணியதும் மாயை செய்த சதியே என்பதை ராஜசேகர மன்னனும் உணர்ந்து ஆறுதல் அடைந்தார். மணிகண்டனின் கட்டளைப்படி, சபரிமலையில் கோயில் கட்ட முடிவெடுத்தார். தன் அரண்மனையில் வாழ்ந்த தெய்வசக்தியான ஐயப்பனை மனதில் தியானம் செய்தபடியே வாழ்நாள் முழுவதையும் கழித்தார்.
----------------------------------------------
நான்கூட இதெல்லாம் சும்மா 'ஃபார்மாலிட்டி'க்காக தான் பண்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஞ்ஞானம் இருப்பது ஆச்சரியப்படவைத்தது:

வாழை இலை சாப்பாடு ஏன்?

வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும், வாழை இலை ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்கச் செய்துவிடும். மேலும் வாழை இலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.

தோப்புக்கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடும்போடு இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையில் நியூரான்களின் (மூளைச் செல்கள்) செயல்பாடுகள் அதிகரிக்கிறது. மேலும் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. 'ஆட்டிஸம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்தக்காலத்தில் ஆசிரியர்கள், படிக்காத மாணவர்களை தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத்திறன் அதிகரிக்கச் செய்யும் உத்தியை அறிந்து வைத்திருந்தார்கள்.

விபூதி பூசுவதன் ஏன்?

தலைக்கு குளித்து விட்டு விபூதியை நெற்றி நிறைய பூசினால் தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் தண்ணீரை விபூதி உறிஞ்சி விடும்.

விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?

மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி, மாவிலைகளுக்கு உண்டு. விழாக்களின் போது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. இந்த நேரத்தில் மாவிலைகள் ஒரு கிருமிநாசினி போல் செயல்பட்டு, காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் தடுத்து நிறுத்துகிறது. மேலும் 'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) வெளியிடச் செய்கின்றன.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?

சாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால், நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது. சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
[19:45, 04/10/2015] ‪+91 90083 70893‬: ஹிந்து தர்மம் பிரசாரத்தினால் விருத்தியாகிறதா? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? இதற்கு ப்ரமானம் என்ன?
ஹிந்து தர்மம் அனுஷ்டிப்பதன் மூலமே விருத்தியாகிறது. ஆனால் அனுஷ்டானம் செய்வதற்காக அதனை பிரசாரம் செய்வது அவசியம். பகவத்கீதையில் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவால் சொல்லப்பட்ட உபதேசங்கள் அனைத்திலும் மனிதன் அனுஷ்டிக்க வேண்டிய கர்மாக்களை பற்றியே விவரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வேதங்களில், உபநிஷத்துக்களில், புராணங்களிலும் மனிதனின் அனுஷ்டானத்திற்கு யோக்யமான விஷயங்களே தெரிவிக்கப்பட்டுள்ளது. பகவத்கீதையின் கடைசியில் அர்ஜுனன் ஸ்ரீக்ருஷ்ண பகவானின் உபதேசங்களை கேட்டு, "கரிஷ்யேவஸனந்தவ" என்று நீ கூறியதை அனைத்தும் ஆசரிப்பேன் என்று கூறினான். அதனால் ஹிந்து தர்மம் எப்பொழுதும் ஆசரிக்கப்பபட வேண்டியதே.
-----------------------------------------------------------------
லக்ஷ்மீ தேவியை எதற்கு வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்?
லக்ஷ்மீ தேவியை வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிரத்யேகமாக பூஜை செய்வதுண்டு. இந்த நாட்களில் தேவியை ப்ரஸன்னமாக்கி, அவளின் ஆசிகள் பெற வேண்டி விரதங்கள் மேற்கொள்வதுண்டு. லக்ஷ்மீதேவிக்கு ப்ரீதிகரமான ஸ்தோத்திரங்கள், ஸ்துதிகள் அன்றைய தினமே பாராயணம் செய்வார்கள். அன்றைய தினத்தில் சில பேர் உபவாசம் இருப்பார்கள். இந்த நாட்களில் மனிதர்கள் மட்டுமேயல்லாமல், புராணங்களில் ராட்சதர்கள் கூட வெள்ளிக்கிழமை அன்று லக்ஷ்மீதேவியை பூஜித்தார்கள் என்பதற்கு உதாரணமாக அனேக கதைகள் உள்ளன. முதலில் வெள்ளிக்கிழமை லக்ஷ்மீதேவி ஆராதனைக்கு அனுகூலமான தினமாக எதற்கு பெயர் பெற்றுள்ளது? ராட்சதர்கள் கூட அன்றைய தினமே ஏன் லக்ஷ்மீதேவியை பூஜித்தார்கள். அதுலேயும் ராட்சஸ ஸம்ஹரியான ஸ்ரீ விஷ்ணு மூர்த்தியின் பார்யையான லக்ஷ்மீதேவியை ராட்சதர்கள் பூஜிப்பதென்ன. இது போன்ற சந்தேகங்கள் வருவது சகஜம். இந்த சந்தேகங்களுக்கு பதில் என்னவென்றால்... ராட்சதர்களின் குரு சுக்கிராச்சாரியர். இந்த சுக்கிராச்சாரியார் பேரை மையமாக வைத்து தான் சுக்கிரவாரம் ஏற்பட்டதென்று புராணங்கள் சொல்லுகின்றன. இது போகட்டும், சுக்கிராச்சாரியாரின் தந்தை ப்ருகு மஹரிஷி. இந்த ப்ருகு மஹரிஷி ப்ரஹ்ம தேவரின் பிள்ளைகளில் ஒருவர். இவர் லக்ஷ்மீதேவியின் தந்தையும் கூட. அதனால்தான் லக்ஷ்மீதேவிக்கு பார்கவி என்று பெயர். இந்த வகையில் லக்ஷ்மீதேவிக்கு சுக்கிராச்சாரியார் சகோதரர். அதனால்தான் லக்ஷ்மீதேவிக்கு சுக்கிரவாரம் என்றால் ப்ரீதி. லக்ஷ்மீதேவியின் ரூபத்தில், வஸ்திர தாரணத்தில் நிறங்களுக்கு கூட முக்கியத்துவன் உண்டு. லக்ஷ்மீதேவிக்கு அதிகமாக சிவப்பு, பச்சை நிறத்தில் வஸ்திரங்கள் தரித்துள்ளதாக போட்டோக்களில் வரையப்பட்டதை காணலாம். சிவப்பு நிறம் சக்திக்கும், பச்சை நிறம் சாதனைக்கும். ப்ரக்ருதிக்கும் சின்னங்கள். ப்ரக்ருதிக்கு லக்ஷ்மீதேவி பிரதிநிதி. அதனால்தான் லக்ஷ்மீதேவியை அந்த இரண்டு நிற வஸ்திரங்களில் அதிகமாக சித்தரிக்கப்படுவதுண்டு. லக்ஷ்மீதேவி தங்க ஆபரணங்கள் போட்டுள்ளது போல் காட்டுவதுண்டு. தங்கம் ஐஸ்வர்யத்துக்கு அடையாளம். ஐஸ்வர்யத்துக்கு அதிதேவதை லக்ஷ்மீ தேவி என்பதால் அவளை தங்க ஆபரணங்களால் அலங்கரிப்பார்கள். விஷ்ணு பகவான் ஆராதனையிலும் லக்ஷ்மீதேவிக்கு முக்கியத்துவம் உண்டு. லக்ஷ்மீதேவி அனுக்ரஹமில்லாமல் விஷ்ணு மூர்த்தியின் அனுக்ரஹம் பெற முடியாது. லக்ஷ்மீதேவியின் க்ருபா கடாக்ஷம் இல்லாமல் விஷ்ணு பகவான் பக்தர்களுக்கு அனுக்ரஹிக்கமாட்டார். ஸதாசாரம், நன்னடத்தை லக்ஷ்மீதேவி ஆஹ்வானங்கள். இந்த இரண்டும் இருந்தால் முதலில் லக்ஷ்மீதேவியின் அனுக்ரஹம், பிறகு விஷ்ணு மூர்த்தியின் அனுக்ரஹம் கூட அடையலாம்.
------------------------------------------------------------------------
பிரதோஷம்
பிரதோஷ வழிபாட்டினைக்
கடைப்பிடித்து சகல நலனும் பெறுவோமாக
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது
ஐதீகம்.
எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.
[21:06, 04/10/2015] ‪+91 94801 83239‬: சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு...!

ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம். சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.

உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.

மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.

அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.

இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.

இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறா�
-------------------------